''இந்தப் பூமி முழுவதும் கியாமத் நாளில் அவனுடைய ஒரு பிடிதான்'' - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

17 ஜூன், 2011

''இந்தப் பூமி முழுவதும் கியாமத் நாளில் அவனுடைய ஒரு பிடிதான்''

'இன்னும் இந்தப் பூமி முழுவதும் கியாமத் நாளில் அவனுடைய ஒரு பிடிதான்'' (அல்குர்ஆன் 39:67)
''நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறதுசூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)
தலைகீழாக நடந்து வருவர்
நம்பிக்கை கொள்ளாத மக்கள் எழுப்பப்பட்டதும் கால்களால் நடக்காமல் தலையால் நடந்து வருவார்கள்.அவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதை முன் கூட்டியே இது அறிவிப்புக் கொடுக்கும் வகையில் அமையும்.
''அவர்களைக் குருடர்களாகவும்செவிடர்களாகவும்ஊமைகளாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக)எழுப்புவோம்''. (அல்குர்ஆன் 17:97)
''அல்லாஹ்வின் தூதரேகியாமத் நாளில் எவ்வாறு முகம் குப்புற எழுப்பப்படுவான்என்று ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் அவனை இருகால்களால் நடக்க வைத்தவன் கியாமத் நாளில் அவனை முகம் குப்புற நடக்கச் செய்ய சக்தி உள்ளவன் இல்லையாஎன்று கேட்டார்கள்.'' (அறிவிப்பவர்அனஸ் ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்புகாரிமுஸ்லிம்)
''சிலர் நடந்தவர்களாகவும்சிலர் வாகனத்தில் ஏறியவர்களாகவும்சிலர் முகம் குப்புறவும் மறுமை நாளில் மக்கள் எழுப்பப்படுவார்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்திர்மிதி)
வாகனத்தில் வருவோர் பலவாறாக வருவார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
''ஒரு ஒட்டகத்தில் இருவர்ஒரு ஒட்டகத்தில் மூவர்ஒரு ஒட்டகத்தில் நால்வர்ஒரு ஒட்டகத்தில் பதின்மர் என்று (பலவாறாகவருவார்கள்என்பது நபிமொழிஅறிவிப்பவர்அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு.
நீலக்கண்களுடன் நிற்பார்கள்
குருடர்களாக எழுப்பப்படுவோரின் கண்கள் நீலம் படர்ந்ததாகவும்கண்கள் மேல் நோக்கியதாகவும் மறுமையில் நிற்பார்கள்.
''(இரண்டாவதுசூர் ஊதப்படும் அந்நாளில் குற்றவாளிகளை நீலம் பூத்த கண்களைக் கொண்டவர்களாக நாம் ஒன்று திரட்டுவோம்
''. (அல்குர்ஆன் 20:102)
''அவர்களுக்கு (தண்டனையைஇறைவன் தாமதப்படுத்துவது கண்கள் விறைத்து விடக்கூடிய அந்த நாளுக்காகத் தான்''. (அல்குர்ஆன் 14:42) 
''வாக்களிக்கப்பட்ட உண்மை நெருங்கி விட்டதுஅப்போது காபிர்களின் கண்கள் நிலை குத்தி நின்று விடும்.'' (அல்குர்ஆன் 21:97)
யாரும் யாருடனும் பேச முடியாது
மண்ணறைகளிலிருந்து எழுப்பப்பட்டவுடன் தாங்கள் தங்கினோம் என்று பேசிக்கொள்வதைத் தவிர எவரும் எவருடனும் பேசிக் கொள்ள மாட்டார்கள்.
''நீங்கள் பத்து நாட்களுக்கு மேல் தங்கியதில்லை என்று அவர்கள் தங்களுக்கிடையே இரகசியமாக பேசிக் கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் 20:103)
''அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்அன்றியும் அவர்கள் செய்வதை பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்அவர்களின் கால்களும் சாட்சி கூறும்.'' (அல்குர்ஆன்86:65)
''அந்த நாள் வரும் போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது''. (அல்குர்ஆன் 11:105)
''இது அவர்கள் பேச முடியாத நாள்ஏதேனும் சமாதானம் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்''. (அல்குர்ஆன் 77:35) 
''அனைத்து சப்தங்களும் (அந்நாளில்ஒடுங்கிவிடும்காலடிச் சப்தத்தைத் தவிர வேறு எதனையும் நீர் செவியுற மாட்டீர்''. (அல்குர்ஆன் 20:108)
இவ்வளவு பயங்கரமான அந்த நாளின் விசாரணை எத்தகையதாக இருக்கும் என்பதை பின் வரும் வசனங்களும்நபி மொழிகளும் விளக்கமாகக் கூறுகின்றன.
உறவுநட்பு ஆகியவை மறந்து விடும்
இவ்வுலகில் மனிதர்களிடையே நிலவி வந்த நட்பும்உறவும் முற்றாக விடைபெற்று விடும்ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கக் கூடிய நாள்!
''அந்த நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும்தன் தாயை விட்டும்தன் தந்தையை விட்டும்தன் மனைவியை விட்டும்தன் மக்களை விட்டும் ஓடுவான்அன்றைய தினம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் நிலையைப் பற்றி எண்ணவே சரியாயிருக்கும்''. (அல்குர்ஆன் 80:34-37)
''நம்பிக்கை கொண்டோரேபேரங்களும்நட்புறவுகளும்பரிந்துரைகளும் பயன் தாரத அந்த நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவிடுங்கள்''. (அல்குர்ஆன் 2:254) 
''ஆகவே எங்களுக்காக (இன்றுபரிந்து பேசுவோரும்உற்ற நண்பரும் இல்லை''. (அல்குர்ஆன் 26:100,101)
''இன்றைய தினம் அவனுக்கு எந்த நண்பரும் இல்லை. (அல்குர்ஆன் 69:35)
''ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பார்ப்பான் (ஆனாலும்ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்குற்றம் புரிந்தவன் அந்த நாளின் வேதனையிலிருந்து தப்புவதற்காக தன் மக்களையும்,மனைவியையும்சகோதரனையும் அவனை அரவணைத்துக் கொண்டிருந்த சுற்றத்தாரையும்இன்னும் பூமியில் உள்ள அனைவரையும் ஈடாகக் கொடுத்து (தான் மட்டும்தப்பித்துக் கொள்ள விரும்புவான்''. (அல்குர்ஆன் 70:10-14)
யாரும் யாரைப் பற்றியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு கொடூரமானதாக அந்த நாள் இருக்கும்.
விசாரணை மன்றம்
இந்த பூமி அழிக்கப்பட்டு இன்னொரு பூமி உருவாக்கப்படும் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டோம்அந்த பூமியில் தான் விசாரணை நடக்கும்அந்த பூமியின் அமைப்பு பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.
''சலிக்கப்பட்ட தூய்மைபடுத்தப்பட்ட மாவினால் செய்த ரொட்டியைப் போல் இலேசான வெண்மை நிறம் கொண்ட பூமியில் மக்கள் கியாமத் நாளில் ஒன்று திரட்டப்படுவார்கள்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்ஸஹ்ல் பின் ஸஃது ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்:புகாரிமுஸ்லிம்)
பயணத்தின் போது உங்களில் ஒருவர் தமது ரொட்டியை தம் கையில் பிடித்திருப்பது போல் இறைவன் மறுமை நாளில் இப்பூமியை ஒரு ரொட்டியைப் போல் தன் கைக்குள் அடக்குவான்என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்புகாரிமுஸ்லிம்)
''இன்னும் இந்தப் பூமி முழுவதும் கியாமத் நாளில் அவனுடைய ஒரு பிடிதான்' (அல்குர்ஆன் 39:67)
ஒரு மைல் தொலைவில் சூரியன்
''இறைவனின் கைப்பிடியில் ரொட்டி போன்றிருக்கும் பூமியின் மேல் சூரியன் நிறுத்தப்படும்பல கோடி மைல்களுக்கப்பால் இப்போது சூரியன் இருப்பது போன்று தூரத்தில் நிறுத்தப்படாதுமாறாக ஒரு மைல் தொலைவு உயரத்தில் சூரியன் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்படும்.
''சூரியன் கியாமத் நாளில் மனிதர்களிடமிருந்து ஒரு மைல் உயரத்தில் நெருக்கமாக நிறுத்தப்படும்மக்கள் தம்தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் நிற்பார்கள்சிலருக்கு வியர்வை கரண்டைக்கால்கள் வரை இருக்கும்மற்றும் சிலருக்கு முட்டுக் கால்கள் வரையிலும்இன்னும் சிலருக்கு வாய் வரையிலும் இருக்கும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்மிக்தாத் ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்முஸ்லிம்) 
''கியாமத் நாளில் மக்களின் வியர்வை பூமியில் எழுபது முழம் வரை இறங்கும்அவர்களின் காதுகளை அடையும் அளவுக்கு கடிவாளம் இடப்பட்டது போல் இருக்கும் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்:அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுநூல்கள்புகாரிமுஸ்லிம்)
''Jazaakallaahu khairan'' இஸ்லாமிய தாவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot