கல்வியில்லையெனில் மக்களில்லை என்பது மறக்கமுடியாத உண்மை. ஆகையால்,தான் ஒவ்வொரு பிள்ளையும் நன்றாக படிக்க வேண்டுமென்று பாமரனும் ஆசைபடுகிறான். ஒவ்வொரு பள்ளியும் வடிவமைக்கிறது! சுற்றம் சிலையாக்கிறது!!
ஆனால் குழந்தைகள்தொடக்கக்க்ல்வி பயலும் போது அதன் மென்மைக்கேற்ப கையாளுதளை பெற்றோர்,பள்ளி,சமுதாயம் மேற்கொண்டிருக்கின்றனவா? என்பது தான் நம் முகத்திற் அறையும் கேள்வி!
முதலாவதாக, பெற்றோர் தனது பிள்ளை எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.அதில் என்ன தவறு இருக்கிறது! ஆனால், அதற்காக தன் குழந்தையை கடிவாளம் போட்ட குதிரையாக இழுத்து செல்லவதுதான் கவலைக்குரிய விஷயம்.
பள்ளிக்கு செனற வந்தவுடன், ஒரு வாய் ஏதேனும் ஒன்றை குடிக்க வைத்து மீண்டும் ஒரு குட்டி கூடாரத்திற்கு துரத்தப்படுகிறார்கள்.அங்கே... ஏற்கனவே, அடைக்கப்பட்ட ஏனைய குட்டிகளுடன் கலந்து விடுகிறது. இதனால்,மாதம் ஒரு தொகை அதற்காக ஒதுக்கப்படுமே தவிர! மனதளவில் குழந்தைகள் ஒடுக்கப்படுகிறார்கள். தவிர, மதிப்பெண் வேண்டுமானால் உயரலாம்.பிஞ்ச்சுக்களின் நெஞ்சத்தில் உறவுகள் எப்போது மலரப்போகிறது?
இன்றைய குழந்தைகள் எத்தனைப்பேர் தங்களுடைய சொந்த பந்தங்களை முழுமையாக அறிந்து வைத்துள்ளனர்? அதனை தெரியவைக்க எத்தனை பெற்றோர் முயற்சி எடுத்து இருப்பர்? இதற்கெல்லாம், அவரவர் மனசாட்சி பதில் சொல்லட்டும்.
நாம் மட்டும் டி.வி பார்க்க வேண்டும்; அந்த நேரத்தில் குழந்தைகள் ' ஹோம் ஒர்க' செய்ய வேண்டும் என்று சில பெற்றோர் எண்ணுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
இன்றைய கல்வி முறையில் விடுமுறை விடப்படுவது ஏன்? குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சி பெறுவதற்கே! விடாப்பிடியாக விடுமுறையிலும் 'டியூசன்' அனுப்புவதால் சுமை அதிகமாகவே செய்கிறது. அளவுக்கு அதிகமான பொதி ஏற்றிய வண்டி குடை சாயுவது இயற்கைத்தானே!
பின்னாளில், தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்த தடம் மாறும் போது பெற்றொர் வெட்கப்பட் வேண்டியுள்ளது! வேதனைப்பட வேண்டியுள்ளது!!
அடைக்காப்பதும்... பொறிப்பதும்... பெரிது
அரவணைப்பது அதைக்காட்டிலும் பெரிது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக