உமர் இல்லம் UMAR HOME: இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 மார்ச், 2025

தப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு!

மார்ச் 11, 2025 0

                                                       


                                                    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

தப்லீக் ஜமாஅத் என்பது என்ன?


தப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது! பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்!

 

தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது!

பயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு! இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்!

 

தப்லீக் ஜமாஅத்தினர் நடவடிக்கைகள்

குடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங்கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.

மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக  பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்!

பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.

முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்!


தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?

மக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்! இதோ சில போதனைகள் பாரீர்!

ஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்

நீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்!

 

Read More

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

மார்ச் 11, 2025 0

                                                 


 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா? நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்! (அல்ஹம்துலில்லாஹ்)

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக  அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார்! இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும்  இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா?

உறுதியான ஈமான் கொண்ட நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுவதை நீங்கள் மறைமுகமாக புறக்கணித்து வாழ்கிறீர்கள் ஆம் பிறை விஷயத்தில் நீங்கள் வழிதவிறிவிட்டீர்கள் நீங்கள் உங்கள் மனோ இச்சையைத்தான் பின்பற்றி வாழ்கிறீர்கள்! இது ஒன்றே போதும் நீங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவர் என்பதற்கு!

வாருங்கள் உங்கள் மனோ இச்சையை எடைபோடுவோம்

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (குர்ஆன் 8:20)

அன்புச் சகோதரர்களே அல்லாஹ் இங்கு இந்த வசனத்தை காஃபிர்களையோ இணைவைப்பாளர்களையோ விழித்து கூறாமல் மூமின்களே என்று கண்ணியமான முறையில் அறிவுறை கூறுகிறான்.

மூமின்கள்தானே படைத்த இறைவனுக்கு எதையும் இணை வைக்காமல் வாழ்ந்து மடிகிறார்கள் ஆனால் அவர்களில் எத்தனைபேர் இணையில்லாத அந்த இறைவனுடைய தூதருக்கு கீழ்படிகிறார்கள்! சிந்திக்கமாட்டீர்களா?

குர்ஆனை ஓழுங்காக ஓதுவோம், அதனை பொருளுணர்ந்து படிப்போம் பிறருக்கும் எத்திவைப்போம் ஆதாரங்கள் நிறைந்த ஹதீஸ்களின் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் என்று சத்திய முழக்கமிடும் தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் ரமலான் மற்றும் ஈதுல்-அல்ஹா பெருநாட்கள் வந்துவிட்டால் தரம்புரண்டு விடுகிறார்களே!

பெருநாள் என்ற அந்த இனிய நாட்களில் மட்டும் தங்கள் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு குர்ஆனை ஓரம் தள்ளிவிட்டு, நபிவழியை புறக்கணித்துவிட்டு நவீன விஞ்ஞானம், ஆன்லைன் பிறை என்ற தங்கள் மனம் போன போக்கில் பெருநாள் கொண்டாடி மகிழ்கிறார்களே இவர்கள் கீழ்கண்ட நபிமொழியை புறக்கணிப் பதேனோ?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்!(நூல்கள்: புகாரி, அஹ்மத்)

மாநபியும் விஞ்ஞான அறிவிப்பும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரன் பிளந்தது என்ற உண்மையை உலகிற்கு காட்டித்தந்தவர் அல்லவா? ஆதாரம் இதோ!

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.

இந்த மாநபி நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்துவிடும் அன்றைய தினம் உங்கள் இஷ்டம் போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு அறிவுறுத்தவில்லை?

மாநபியும் பிறை பற்றிய அறிவிப்பும்

கண்ணியமிக்க எங்கள் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறைகள் நோன்புகள் பற்றி என்ன கூறினார்கள்?

ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).

மாநபியும் மாதங்கள் பற்றிய அறிவிப்பும்

எங்கள் உம்மி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மாதங்களை எவ்வாறு தீர்மானிக்க அறிவுறுத்தினார்கள் மறந்துவிட்டதா? ஆதாரம் இதோ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).

மாதங்கள் பிறைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றுதானே நபிகளார் அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதை மறந்து விட்டு ஆயிரம் வருடங்களுக்கு நாங்கள் காலண்டர்களை கணித்து கூறுவோம் என்று ஜோசியக்காரர்களை போன்று நம்மில் தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு போன காரணம் என்னவோ? ஏன் நபிமொழிகள் கேட்டு கேட்டு உள்ளம் புளித்து போய்விட்டதா?

இந்த வசனம் இந்த விஞ்ஞான காலத்திற்கு பொருந்தாதா?

கண்ணியமிக்க சகோதரர்களே படைத்த இறைவன் முற்றும் அறிந்தவன் அவன் விஞ்ஞான வளர்ச்சியையும் அறிந்தவன் அவனே அதை நமக்கு கற்றுத்தருபவன். அவன் நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் எனவே பிறைகளை மக்களே கணிக்கலாம் என்று சட்டம் வகுத்திருக்கலாம் அப்படி சட்டம் வகுத்து தருவது அவனுக்கு சிரமமானதல்ல ஆனால் அவன் கீழ்கண்டவாறு தான் சட்டம் வகுத்துள்ளான்!

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஆனால் இன்றைய மக்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் நாங்கள் அறிவியல் வல்லுனர்கள் என்று மார்தட்டிக்கொண்டு மேற்கண்ட வசனத்தை மறக்கடிக்கிறார்கள்! உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று இறைவன் கூறும் இந்த செய்தி இந்த விஞ்ஞான சாட்டிலைட் காலத்திற்கு பொருந்தாத வசனமா? அப்படியானால் உங்களில் இந்த வசனம் தேவையில்லை என்று கூற முன்வருபவர் யார்? நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையானவராக இருந்தால் இந்த சவாலை ஏற்று வாருங்கள் பார்ப்போம்! அல்குர்ஆனுடைய வசனமாகிய 2:185 இந்த காலத்திற்கு தேவைப்படாது, காலத்துக்கு முரண்பட்டது என்று கூற உங்களில் எவனுக்கேனும் திராணியிருக்கா? ஒருவராவது கையை உயர்த்துங்கள் பார்ப்போம்!

தரம்புரண்ட தவ்ஹீத் கொள்கை சகோதரர்கள்

இன்றைய நவீன விஞ்ஞான காலத்தில் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது அவர்கள் கூறுகிறார்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட தீர்மானம் வகுத்தால் நாங்களும் அவர்களுடன் உடன்படுகிறோம் என்று! இவர்கள் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஆனால் கொள்கையில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த கொள்கைவாதிகள் நாளை கீழ்கண்டவாறுகூட கூற முன்வருவார்களா?

உலகம் முழுவதும் நபிவழியை புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம்

தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த தரம்கெட்ட கொள்கைவாதிகளிடம் நாம் கேட்கும் கேள்விகள் இதுதான்!

  1. பிறையை தீர்மானிப்பது நபிவழியின் அடிப்படையிலா? அல்லது உலக மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
  1. அருள்மறை குர்ஆனை பின்பற்றுவது 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) என்ற யாரோ ஒருவர் வாழ்ந்தாராமே அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையிலா? அல்லது தற்போது நம்முடன் வாழந்துக் கொண்டிருக்கும், வாழப்போகும் 600 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூட இனி எங்களுக்கு குர்ஆன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹராமை ஹலால் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?
  1. உலகம் முழுவதும் ஒன்று கூடி ஹலாலை ஹராம் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா?

நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுவதை மறுத்து உலகப்பிறைக்கு வக்காலத்து வாங்க துடிக்கும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல மாறாக தவ்ஹீதில் தடம்புரண்ட தருதலைவாதிகள்! இவர்கள் இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவதை காட்டிலும் 600 கோடி மக்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட துடிக்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது அல்லாஹ்தான் இவர்களை திடப்படுத்த வேண்டும்!

ஒருவேளை உலகில் வாழும் 600 கோடி மக்களும் அல்லாஹ்வை வணங்குவதை வெறுத்தால் அவர்களின் மனோ இச்சைக்கும் இவர்கள் கட்டுப்படுவார்களா? இதோ இவர்களி்ன செயல் கீழ்கண்ட இறைவசனத்தை நினைவுபடுத்தவில்லையோ!

(நபியே! இன்னும்) நீர் கூறும்: அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை(குர்ஆன் 3:32)

கொள்கையை விட குடும்பம்தான் முக்கியமா?

அன்புச் சகோதர, சகோதரிகளே இன்று இந்த பிறை விஷயத்தில் நாம் போராடுவது உன்னதமான அந்த நபிவழியை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆனால் ஒரே நாள் உலகம் முழுவதும் பிறை என்ற வாதிடுபவர்கள் எதற்காக இந்த கொள்கையை விடுகிறார்கள் தெரியுமா? காரணங்கள் இதோ!

1.       சவுதி, துபாய் நாடுகளில் வாழும் மகன் தான் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தன் தாயும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

2.       தாய்நாட்டில் வசிக்கும் சகோதரனோ வெளிநாடுகளில் வாழும் தன் சகோதரன் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தானும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்!

3.       தாய்நாட்டில் வசிக்கும் மக்கள் சவுதி மக்களை பார்த்து  இன்று அவர்கள் பெருநாள்  கொண்டாடும் போது நாம் இன்று சொந்த நாட்டில் திண்டாட வேண்டுமா? என்று பதறுகிறார்கள்!

4.       வெளிநாட்டுவாழ் மக்களோ இன்று நாங்கள் பெருநாள்  கொண்டாடி விட்டோம் எங்களைப் போன்று மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ஏன் பெருநாள் கொண்டாடவில்லை என்ற புலம்புகிறார்கள்!

குடும்ப உறுப்பினர்களிடம் அளவுகடந்த பாசம் வைக்கும் மேற்கண்ட நபர்களிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான்! உங்களை பெற்ற தாய், வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரன், சகோதரி, கட்டிய மனைவி, பெற்றெடுத்த மகன், மகள் ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது நபியையும் விட சிறந்தவர்களா? உங்கள் நேசம் உங்கள் குடும்பத்தாருடன்தானா? அப்படியானல் உங்கள் குடும்பத்தாரின் மீது நேசம் காட்டுவதற்காக வேண்டி கீழ்க்ணட வசனத்தை குர்ஆனிலிருந்து நீக்கிவிடலாமா?

நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்” (திருக்குர்ஆன், 3:31)

வாருங்கள் உங்களில் யார் உங்கள் குடும்பத்தாரையும் விட  அல்லாஹ்வை அதிகம் நேசிக்க முன்வருகிறார்கள் என்பதை நாமும் பார்க்கிறோம்!

நீங்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நேசித்திருந்தால் அவருடய நபியை பின்பற்றி பெருநாள் கொண்டாட வேண்டுமே ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நேசிப்பதை விட உங்களுடைய வெளிநாட்டுவாழ் சகோதர, சகோதரிகளையும், தாய்நாட்டுவாழ் தாய் தந்தையரும்தானே நேசமுள்ளவர்ளாக இருக்கிறார்கள்! இதனால்தானே நபிவழியை புறக்கணிக்கிறீர்கள்!

(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.(அல்குர்ஆன் 6:106)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்அன் 8:20)

மத்யன் நகர மக்களும் ஷுஐப் நபியும் படிப்பினை

இந்த பிறை விஷயத்தில் விஞ்ஞானத்தை பின்பற்றும் நீங்கள் தரம்புரண்டுவிட்டீர்கள் உங்களைப் போன்றே அளவை நிறுவைகளில் தரம்புரண்ட ஒரு சமூகத்தை பற்றி அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

மதயன் நகர மக்களை அளவை நிறுவைகளில் மோசடி செய்து வந்தார்கள் அவர்களை நேர்வழிப்படுத்த அவர்களின் சகோதரரும் நபியுமாகிய ஷுஐப் (அலை) அவர்கள் வருகிறார்கள். அவர் தன் சமூகத்தாரிடம் கூறுகிறார் இதோ

“(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (அல்குர்ஆன் 11:85)

ஷுஐப் நபியின் வரலாற்றை நாம் கூறுவது உங்களுக்கு பொருத்தமில்லாதவையாக தென்படலாம் ஆனால் இதிலும் படிப்பினை உள்ளது! அளவை நிறுவைகளை அறியாத சமுதாயதவர்கள் அதுபற்றி அறிந்துக்கொள்கிறார்கள் பின்னர் அவைகளில் மோசடி செய்கிறார்கள் இதை கண்டிக்கும் போது கூடவே பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்என்று நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் அதற்க அந்த மக்கள் கூறிய பதில் என்ன தெரியுமா? இதோ

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11:87)

இப்படிப்பட்ட ஏளனமான வார்த்தைகளைத் தான் இன்று உலகப் பிறை ஒரே பெருநாள் என்று கர்ஜிக்கக்கூடிய சகோதரர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதிலையும் நபி ஷுஐப் நமக்க கற்றுத்தருகிறார் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)

உலகப் பிறை என்று வாதிடக்கூடியவர்களிடம் நாம் ஆதாரங்களை காட்டினால் அதை நிராகரித்து மத்யன் நகரவாசிகள் எவ்வாறு நபி ஷுஐப் அவர்களை இகழ்ந்தார்களோ அதைப்போன்று இவர்களும் நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுபவர்களையும் அதை அறிவுறுத்து பவர்களையும் இகழ்கிறார்கள் இதோ ஆதாரம்

(அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லைநிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் 11:91)

நபி ஷுஐப் அவர்கள் கூட குடும்பத்தாரைவிட அல்லாஹ் வைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறார்

(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.(அல்குர்ஆன் 11:92)

நபிக்கு கட்டுப்படாதவர்களுக்கு கட்டுப்படுதல் இல்லை!

என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:93)

எனவே சகோதரர்களே ஷுஐப் நபியின் மேற்கண்ட கருத்தையே நாமும் கூறுகிறோம் நீங்க்ள உங்களுக்கு இசைந்தாவறு செய்து கொண்டிருங்கள் நபிவழியில் பெருநாள் கொண்டாடுபவர்களான நாங்களும் நபிவழிக்கு இசைந்தவாறு பெருநாள் கொ்ணடாடு கிறோம். நம்மில் இழிவுதரம் வேதனை யாருக்கு வந்தடையும் என்பதையும், நம்மில் பொய்யர் நீங்களா, நாமா? என்பதை  மஹ்ஷரில் அல்லாஹ்வின் சமூகத்தில் அறிந்துக்கொள்வோம் வாருங்கள்! ஒரு வேளை இந்த உலகமே எங்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்றாலும் தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் நபிவழயில் தொழுகைகள், ஜகாத், ஹஜ், உம்ரா, குர்பானி, பெருநாட்கள் மற்றும் ஏவைகள் எல்லாம் எங்கள் இறைவன் எங்கள் மீது கடமையாக்கியுள்ளானோ அவைகளை குர்ஆன் மற்றும் நபிவழியில்தான் பின்பற்றுவோம்! எங்கள் இறைவனுக்கு நாங்கள் மாறு செய்யமாட்டோம் எங்கள் நபியின் வழியை கைவிடமாட்டோம்! நாங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுவோம் அதே நிலையில் மரணிக்கவும் செய்வோம் (இன்ஷா அல்லாஹ்)!

இதோ உங்களுக்கு இறுதியாக உபதேசம் செய்கிறோம்!

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)

ஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா? உங்கள் கொள்கை சரியா?

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். (அல்குர்ஆன் 11:944)

அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட சகோதரர்களே நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை ஒழுங்காக பின்பற்ற துடிக்கும் நீங்கள் பிறை விஷயத்தில் தரம்புரண்டுவிடாதீர்கள், சோதிடக்காரனிடம் சென்று நல்ல நாள் பற்றி குறிகேட்பதும் ஒன்றுதான் 1000 வருடங்களுக்கு ஹிஜிரா காலண்டரை தயாரித்து பெருநாள் தொழுகைகளை விஞ்ஞான கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே தீர்மானிப்பதும் ஒன்றுதான்.

எனவே இப்படிப்பட்ட பிறை சோதிடர்களை நம்பி உங்கள் ஈமானை அல்லாஹ்வின் சமூகத்தில் கேள்விக்குறியதாக ஆக்கிவிடாதீர்கள்! இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை புறக்கணித்துவிடாதீர்கள்!

நீங்கள் நபிவழியை புறக்கணித்து மனோ இச்சையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிம் கொண்டால் அது அல்லாஹ்வை தவிர்த்து கப்ருகளையும், சிலைகளையும் வணங்கக்கூடிய காஃபிர்கள், முஷ்ரிக்குகள், முனாஃபிக்குகளின் தீர்மானங்களை ஒத்த தீர்மானமாகும்! எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் மஹ்ஷரில் மூமின்களாக இப்ராஹீம் நபி போன்ற நல்ல கூட்டத்தாரோடு நிற்க ஆசைப்பட்டால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிவழி)யை உறுதியாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் இதைவிட உங்களுக்கு வேறு வழி இல்லை! THERE IS NO OPTION TO PROHIBIT QUR’AN & SUNNAH இதோ ஆதாரம்!

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (அல்குர்ஆன் 2:130)

இந்த குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணிக்காதீர்கள்

நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:57)

விஞ்ஞான பிறையை கணிக்கும் விஞ்ஞானிகளே நபிவழியை புறக்கணிக்காதீர்கள்! தரம்புரண்ட நீங்கள் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

சுப்ஹானல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹு அக்பர்

لا اله الا الله محمد رسول الله

Read More

9 மார்ச், 2025

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

மார்ச் 09, 2025 0

 

அல்லாஹு அக்பர்

முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன ஒன்று அல்லாஹு இரண்டாவது அக்பர்.

அல்லாஹு என்றால் யார்?

மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் என்றால் அரபியர்களின் இறைவன் என்றும் முஸ்லிம்களின் இறைவன் என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவனைக் குறிப்பதற்கே அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.

அந்த ஒரே இறைவனைக் குறிக்க ஆங்கிலத்தில் காட் (God), தமிழில் கடவுள், ஹிந்தியில் பகவான் என்றெல்லாம் குறிப்பிடுவதைக் காணலாம். என்றாலும் மேற்கூறிய வார்த்தைகளைக் காட்டிலும் அல்லாஹ் என்ற சொல் தனித்து விளங்குகிறது என்பதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு அதில் சில காரணங்கள்:
இவ்வார்த்தைக்கு ஆண்பால் பெண்பால் கிடையாது, பன்மையும் கிடையாது. எப்போதும் இது ஒருமையிலேயே திகழும். உதாரணமாக காட், என்ற வார்த்தை God – god’s , goddess அல்லது கடவுள் – கடவுளர்கள் என்றும் பகவான் – பகவதி என்றும் பன்மைக்கும், பாலுக்கும் ஏற்றவாறு மாறுவதுபோல் அல்லாஹ் என்ற வார்த்தை ஒருபோதும் மாறுவதில்லை.

இறைவனின் மார்க்கம் அனைத்து மக்களுக்குமானது உலகில் உள்ள மக்கள் அவனையே அழைத்து பிரார்த்திக்க வேண்டும். எந்த மொழி பேசக்கூட்டியவராக இருந்தாலும் அவர் அல்லாஹ் என்று அழைக்கும் போது அதன் மூலம் உலகளாவிய சகோதரத்துவம் உருவாகிவிடுகிறது.

இந்த உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் ஏகானாகிய இறைவன் தனக்கு சூட்டிக்கொண்ட பெயர் தான் அல்லாஹ் என்பதாகும்.

இதன் பொருள் உண்மையான வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதாகும்.
இமாம் இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ் என்ற பெயர் அவனது அழகிய அனைத்து பெயர்களின் பொருளையும் அதனுள் உள்ளடக்கியிருக்கிறது என்று அறிகிறோம்.

மேலும் கூறினார்கள் :
அல்லாஹ் என்ற பெயர் அவன் இறைவன் என்பதையும் வணக்கத்திற்குரியவன் என்பதையும் தெரிவிக்கிறது பணிவு, மதிப்பச்சம், நேசம் ஆகியவற்றால் படைப்புகள் அவனை வணங்குகிறார்கள். தேவைகளின் போது திடுக்கிட்டு அவன் பக்கம் திரும்புவார்கள்.
(மதாரிஜுஸ்ஸாலிகீன் 1\56)

இதன் அடிப்படையில் படைப்பினங்கள் அனைவரும் வணங்கி,வழிபடத் தகுதியுடையவன் அல்லாஹ் மட்டுமே ..
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் (எதுவும்) இல்லை.”
(திருக்குர்ஆன் 112: 1-4)

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா இறையச்சமும், தூய்மையும் உடையோராகலாம்.
(அல்குர்ஆன் 2:21)

அல்லாஹு அக்பர்

கபீர் என்றால் பெரியவன் என்று பொருளாகும். அக்பர் என்றால் மிகப்பெரியவன் என்று பொருளாகும். அல்லாஹு அக்பர் என்றால் அல்லாஹ் அனைத்தையும் விட மிகப்பெரியவன் மகத்துவமிக்கவன் இன்னும் எல்லாவற்றையும் விட கண்ணியமிக்கவன் என்பதாகும். அல்லாஹ் மிகப்பெரியவன் என்றால் அவனை விட பெரியது எந்த ஒன்றும் இல்லை. அனைத்தும் அவனுக்கு பணிகிறது. தக்பீர் என்பது அல்லாஹ்வின் மேன்மையை அறிவிப்பதும் உள்ளம் அவனது பெருமைக்கு பணிவதுமாகும்.

அல்லாஹ் அவனது (தாத்தால்) உள்ளமையாலும் ஆற்றலாலும், கண்ணியத்தாலும், வலிமையாலும், மகத்துவத்தாலும் மிகப்பெரியவன் ஆவான் மேற்கூறிய பொருள் ஒரு நம்பிக்கையாளனுக்கு அல்லாஹ்வின் மீதான உறுதியையும், அவனைக்குறித்த நல்லெண்ணத்தையும் வழங்குகிறது. அவனது வாழ்க்கையில் எந்த தடைகளுக்கு முன்னரும் தடுமாறி நிற்காமல் வரும் காலத்தைக் குறித்து அச்சம்கொள்ளாமலும் இழந்தவற்றிற்காக வருத்தப்படாமலும் இருப்பதற்குமுரிய உறுதியையும் அது வழங்குகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான வார்த்தை நான்கு சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் இதில் எதைக்கொண்டு துவங்கினாலும் உனக்கு எந்த தீங்கும் இல்லை.
நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 2137

அல் அலீ என்ற அல்லாஹ்வின் பெயருடன் அல் கபீர் என்ற பெயர் இணைத்து கூறப்படுவதுண்டு.
(பார்க்க அல்குர்ஆன் 22:62 / 40:12)

அல்லாஹு அக்பர் என்று கூறுவதை செவியுறும் ஷைத்தான் சிறுமை அடைந்து விடுகிறான்.
தக்பீர் சொல்வது மகத்தான திக்ராகும் அதே போன்று அது மிகப்பெரிய இபாதத் ஆகும். எனவே தான் அல்லாஹ் தக்பீர் கூறுவதற்கு அடியார்களுக்கு அழைப்பை விடுக்கிறான் அதற்காக ஆர்வமூட்டுகிறான்.

“அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலவீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
(அல்குர்ஆன் 17:111)

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
(அல்குர்ஆன் 74:3)

மார்க்கத்தில் தக்பீர் சொல்வதற்குரிய இடங்கள்

1.அதானின் போது

அதான் கூறும்போதும் இகாமத் கூறும்போதும் அல்லாஹ் அக்பர் என்று தான் தக்பீர் கூறவேண்டும். அதானில் நாள் ஒன்றுக்கு முப்பது முறை தக்பீர் சொல்லப்படுகிறது.

2.இகாமத்தின் போது

இகாமத்தில் இருபது முறை தக்பீர் சொல்லப்படுகிறது.

3.தொழுகையின் போது

தொழுகையில் ஆரம்பத்தில் தக்பீர் சொல்லவேண்டும் அதன் பின்னர் ருகூஃ, சுஜூத் போன்ற அசைவின் போதும் தக்பீர் சொல்லவேண்டும்.

கடமையான தொழுகையில் மட்டும் ஒருவர் தொண்ணுற்றி நான்கு முறை தக்பீர் சொல்ல வேண்டும். இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறினார்கள், இரண்டு ரகஅத் தொழுகையில் பதினொரு முறை தக்பீர் சொல்லவேண்டும் அவை தக்பீருத் தஹ்ரீம் மேலும் ஒவ்வொரு ரகஅத்திலும் ஐந்து தக்பீர். மூன்று ரகஅத் தொழுகையில் பதினேழு முறை தக்பீர் சொல்லவேண்டும் அவை தக்பீருத் தஹ்ரீம், முதல் தஷஹ்ஹுதில் இருந்து எழும் போது கூறும் தக்பீர் மேலும் ஒவ்வொரு ரகஅத்திலும் ஐந்து தக்பீர். நான்கு ரகஅத் தொழுகையில் இருபத்தி இரண்டு முறை மொத்தமாக ஐவேளைத் தொழுகையில் தொண்ணுற்றி நான்கு தக்பீர் சொல்லவேண்டும்.
ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் 4\98

4.தொழுகைக்கு பின்னர்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை (மக்கள் கூறும்) தக்பீரை வைத்து நான் அறிந்துகொள்வேன்.
நூல்:ஸஹீஹுல் புஹாரி 842

5.துல்ஹிஜ்ஜா மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள்

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், இந்த பத்து நாட்களில் செய்கின்ற அமல்கள் வேறு நாட்களில் செய்யும் அமல்களை விட அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமானதாகும். எனவே அதில் தக்பீரையும் (அல்லாஹு அக்பர்) தஹ்லீலையும் (லா இலாஹ் இல்லல்லாஹ்) தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) என்பதையும் அதிகமாகக் கூறுங்கள்.
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா 13919

6.மேட்டில் ஏறும் போது தக்பீர் சொல்வது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேட்டில் ஏறும்போது ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று தக்பீர் கூறிவந்தோம்.
ஸஹீஹுல் புஹாரி 2993

7.தக்பீர் ஹஜ்ஜின் அடையாளங்களில் ஒன்று

ஜம்ராவில் கல்லெறியும் போது மினாவிலிருந்து அரஃபாவிற்கு செல்லும்போது,
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குப் போகும்போது அனஸ்(ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய (அரஃபா) நாள் என்ன செய்தீர்கள்?” எனக் கேட்டேன்.
அதற்கு, “அன்று எங்களில் சிலர் தல்பியா (லப்பைக்க அல்லாஹ்) கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. வேறுசிலர் தக்பீர் கூறினார்கள்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை” என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி 1659)

8.இரண்டு பெரு நாட்களிலும்

ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா ஆகிய இரண்டு பெருநாட்களிலும் பெருநாள் இரவிலிருந்து தொழுகையின் நேரம் வரை தக்பீர் சொல்வது.

உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).
(அல்குர்ஆன் 2:185)

9.ஈது தொழுகையில் அதிகப்படியான தக்பீர் சொல்வது

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) ஈதுல் அள்ஹா மற்றும் ஈதுல் ஃபித்ர் தொழுகை முதல் ரகஅத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரகஅத்தில் ஐந்து தக்பீரும் கூறக்கூடியவராக இருந்தார் என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
நூல்:சுனன் அபீதாவூத் 1149

10.அல்லாஹ்வின் தூதர் வாகனத்தில் ஏறினால் மூன்று முறை தக்பீர் கூறுவார்கள்

அல்லாஹு அக்பர் என்பது முஸ்லிமின் வாழ்வில் ஈமானிய புத்துணர்ச்சியை அளிக்கிறது.

அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட வீரன் அவனது மார்க்கத்தையும், நீதியையும், நியாயத்தையும், நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சியின் போது எதிரியின் அச்சுறுத்தலுக்கு பணியாமல் அடக்குமுறைக்கு அஞ்சாமல் நெஞ்சுறுதியோடு இருப்பதற்குரிய உற்சாகத்தை அல்லாஹு அக்பர் என்கிற வார்த்தையே அவனுக்கு உரமாக உள்ளது.

போர்க்களத்தில் அல்லாஹு அக்பர் என்று கூறும்போது அல்லாஹ்வின் கண்ணியத்தையும், அவனது வல்லமையையும், மகத்துவத்தையும், அவனது உதவியையும் நம்பிக்கையாளன் உணர்கிறான். அதன் காரணமாக அல்லாஹ்விடம் ஆற்றலையும், உறுதிப்பாட்டையும், இக்லாஸையும் (உளத்தூய்மையையும்) வேண்டுகிறான்.

Read More

21 ஜனவரி, 2023

ஜனாஸா வீடு – சில அவதானங்களும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களும்

ஜனவரி 21, 2023 0

 


இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டும் ஒரு மார்க்கமாகும். அந்தவகையில் நம்மில் ஒருவர் இறந்த பின்னரும் அவருக்குச் செய்ய வேண்டிய சில கடமைகளை வலியுறுத்தியுள்ளது. அதேபோல், அவரது குடும்பத்திற்கும் நாம் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. அவற்றில் சிலவற்றை சுருக்கமாக இக்கட்டுரை ஆராய்கிறது.

கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More

9 ஜனவரி, 2023

புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா?

ஜனவரி 09, 2023 0

 


புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா?

ஸாஜிதா

ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

(ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்பது தனி விஷயம்.)

புத்தாண்டு கொண்டாட்டம் கிறித்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் அதை நாம் கொண்டாடக் கூடாது.

3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود

ஒரு சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் அவர்களைச் சேர்ந்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவூத்

மேலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

நமது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டது என்ற கவலைப்படும் தகவல் தான் அதனுள் அடங்கியுள்ளது.

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூடநம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களைத் தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாகக் கருதி வந்தனர். இதைக் கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களுக்கும் என்ன சிறப்பு என்று நபிகள் நாயகம் அவர்கள் (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும், நோன்புப் பெருநாளுமாகும் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத்

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும், மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. ஆண்களும், பெண்களும் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் நாசமாக்கப்படுகின்றன. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டு கொண்டாட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு முஹர்ரம் மாதம் முதல் பிறை அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது.

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று சொல்வதும், அதைக் கொண்டாடுவதும் தவறாகும்.

பிற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லலாமா? என்ற கேள்விக்கு ஏற்கனவே நாம் அளித்த பதிலைப் பார்க்கவும்.

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

                                                                                         நனஂறி.ONLINE.PJ

Read More

Post Top Ad

Your Ad Spot