நபிமொழி - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

4 பிப்ரவரி, 2011

நபிமொழி





ஏழு வகை மக்களுக்கு அல்லாஹ் மறுமையில் தன் நிழலில் இடம் அளிப்பான்.
1.நீதியுள்ள தலைவன்
2.வணக்கத்தில் மூழ்கிய இளைஞர்.
3.ஜமாஅத்காக மசூதி செல்பவர்.
4.அல்லாஹ்வுக்காக நட்பு கொள்பவர்.
5.விபச்சாரம் புரிய மறுக்கும் பெண்.
6.இடக்கைக்கு தெரியாமல் வலக்கையால் தர்மம் கொடுப்பவர்.
7.தனிமையில் இறைபக்தியில் மூழ்கி கண்ணீர் வடிப்பவர்.


அ:அபூ ஹுரைரா
ஆ:புகாரி,முஸ்லிம்,திர்மிதி,நஸாயீ


நபிமார்களின் வழிமுறைகள் நாண்கு.
1.நாணமுறுவது
2.நறுமணம் பூசுவது.
3.பல்துலக்குவது
4.மணம் புரிவது.


அ:அபூ ஐயூப்(ரலி)
ஆ:திர்மிதி


ஏழு செயல்கள் ஏற்படுமுன் நீங்கள் நற் செயலில் ஈடு பட்டு விடுங்கள்.
1.இறை நன்றியை மறக்கடித்து விடும் ஏழ்மை.
2.அநியாத்திற்கு உதவும் செல்வம்.
3.உடல் நலத்தைக்கெடுக்கும் நோய்
4.முதுமையில் ஏற்படும் இயலாமை
5.எதிர்பாராமல் ஏற்படும் இறப்பு.
6.தஜ்ஜாலின் வருகை
7.திடுக்கம் அளிக்கவல்ல மறுமை.


அ:அபூ ஹுரைரா
ஆ:முஸ்லிம்


நாண்கு விஷயங்களை நம்பாதவன் உண்மை விசுவாசி அல்ல
1.தையிப் கலிமாவை உறுதி பேணல்
2.இறப்பை நம்புதல்
3மறுமையை நம்புதல்
4.விதியை நம்புதல்


அ:அலி (ரலி)
ஆ:திர்மிதி


இறை நம்பிக்கையாளர்களிடம் இருக்காத இரு செயல்கள்
1.உலோபத்தனம்
2.கஞ்சத்தனம்


அ:அபூ ஸயீதில் குத்ரிய்யீ
ஆ:திர்மிதி


அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளை இட்ட 10 விஷயங்கள்.
1.மறைவாகவும்,வெளிப்படையாகவும் இறைவனுக்கு அஞ்சுதல்
2.சினத்திலும்,திருப்தியிலும் நீதத்தை கடை பிடித்தல்.
3.ஏழ்மையிலும்,செல்வத்திலும் நடுநிலையாக இருத்தல்
4.உறவை அறுத்துக்கொள்பவருடன் வலிய சென்று உறவாடுதல்
5.யாதும் அளிக்காதவருக்கும் சன்மானம் அளித்தல்
6.அநீதி இழைத்தவரை மன்னித்தல்.
7.மவுனம்(சிந்திப்பதாகவும்)
8.பேச்சு(தியானமாகவும்,
9பார்வை(அறிவு பெறுவதாகவும்)
10.நன்மையைக்கொண்டு ஏவுதல்


அ:அபூ ஹுரைரா
ஆ:ரஜீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot