மருத்துவரை அணுகாமல் தாங்களாகவே மருந்து சாப்பிடுவதில் ஆண்களை விட பெண்கள் முன்னிலை வகிப்பதாக ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
உடல் நலம் பாதிக்கப்படும் போது மருத்துவரை அணுகுகிறார்களா? சுயமாக மருந்துசாப்பிடுகிறார்களா? என்பது பற்றி ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் உள்ள தேஜீவான் கார்லஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
ஆய்வில் பங்கேற்ற ஸ்பெயினைச் சேர்ந்தவர்களில் 20.17 சதவீதம் பேர் மருத்துவரைஅணுகாமல் சுயமாக மருந்து சாப்பிடுவது ஆய்வில் தெரியவந்தது. அதிலும் தங்கள் உடல் உபாதைகளுக்கு ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் மருந்து சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
பொதுவாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட சாதாரண பிரச்னைகளுக்கு ஆண்களில்பெரும்பாலானவர்கள் மருந்து சாப்பிடுவதில்லை. ஆனால் பெண்களோ தலைவலியாக இருந்தால் கூட உடனே மருந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் உணர்ச்சி வசப்படுகின்றனர். சிறிய பிரச்னைகளை கூட பெரியதாக கருதுகின்றனர். ஆனால் பிரச்னையை சமாளிக்கும் பக்குவம் பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் உள்ளது என ஆய்வுக் குழுவின் தலைவர் பிலர் கரஸ்கோ தெரிவித்துள்ளார்
அஸ்ஸலாமு அழைக்கும்
பதிலளிநீக்கு