மாதுளையின் மருத்துவ குணங்கள் - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

27 மே, 2011

மாதுளையின் மருத்துவ குணங்கள்


மாதுளையில் மூன்று ரகம்
அடர் சிவப்பு மற்றும் லேசான சிவப்பு நிறத்துடன் முத்துக்கள் போலவே காணப்படும் மாதுளைபார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும்இதில் புரதம்கொழுப்புமாவுதாதுப் பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றனநீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் மாதுளையில் 12 முதல் 16 சதவீதம் வரை சர்க்கரைச்சத்து உள்ளது.
மாதுளையில் இனிப்புபுளிப்புதுவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளனஇதில் இனிப்புபுளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்ததுமாதுளையின் பழம்பூபட்டைஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்ததுமாதுளையின் பழங்களில் இரும்புசர்க்கரை சுண்ணாம்புபாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும்உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளனமாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும்அதிக அளவிலும் அழித்து விடுகிறதுஅதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறதுஇனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும்மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறதுபித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறதுரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறதுபித்தநோய்களை நிவர்த்தி செய்கிறதுகுடற்புண்களை ஆற்றுகிறதுபெப்டிக் அல்சர்டியோடினல் அல்சர்கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.
மாதுளையின் சாறு எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால்அதை எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்துநாம் சிறப்பாக செயல்பட உதவுகிறதுஎந்த உணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்குஇந்த பழத்தை ஜுஸாக கொடுக்கலாம்இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறதுஉடம்பில் உள்ள உஷ்ணத்தைக் குறைக்கிறதுஎனவே வெயிலில் அலைபவர்கள் இதை அடிக்கடி உட்கொள்ளலாம்.
மாதுளம் பழச்சாற்றுடன் தேன்
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால்ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும்புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும்.மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போதுஇரத்த வாந்திஇரத்த மூலம் வயிற்றுக் கடுப்புஉடல் சூடு தணியும்இரத்தம் சுத்தியடையும்இரத்த விருத்தி உண்டாகும்மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், (இன்ஷா அல்லாஹ்இருமல் நிற்கும்.
ஆண்மை பெருக
மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறதுமேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள்இதய பலகீனம்நிவர்த்தியாகும்இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறதுதொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும்உடல் எடை கூடும்தொண்டைமார்பகங்கள் நுரையீரல்,குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறதுஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
விக்கல் உடனே நிற்க
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்அதிக தாகத்தைப் போக்கும்அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்சரீரம் குளிர்ச்சியடையும்காய்ச்சல் தணியும்.
மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்பற்களும்எலும்புகளும் உறுதிப்படும்மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் (இனஷா அல்லாஹ்பெறலாம்.
கடுமையான இதய வலி நிற்க
மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும்இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி (இனஷா அல்லாஹ்நீங்கி விடும்நீடித்த இருமல் குணமாகும்.
பெண்களுக்கு உதிரப்போக்கு நிவர்த்தியாக
மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள்மாதுளம் பூச்சாறுஅருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால்இரத்தம் கொட்டுதல் நின்று விடும்பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்இரத்த மூலம் நீங்கும்மூலக் கடுப்பும்உடல் சூடும் தணியும்வாந்திமயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலைமாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலிகுடல் இரைச்சல்வயிற்றுப் பொருமல்(இன்ஷா அல்லாஹ்தீரும்.
வயிற்றுப் புண்கள் குணமாக
மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதைகாலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளதட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்புளிப்புமாதுளம் பழத்தோல்சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் (இன்ஷா அல்லாஹ்குணமாகும்.
சீத பேதி குணமாக
மலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம்,கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் இனஷா அல்லாஹ் குணமாகும்உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்துசிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும்.இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண்தொண்டைவலிவாய்ப்புண் (இன்ஷா அல்லாஹ்குணமாகும்.
பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாக
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலைமாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால்தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு (இன்ஷா அல்லாஹ்)நிவர்த்தியாகும்மாதுளம் விதைவேர்ப்பட்டைமரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டுவேளைக்கு கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.
இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க
மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும்வெப்பநோய் தீரும்.மாதுளம் பூக்கள் அறுகம்புல்மிளகுசீரகம் அதிமதுரம்சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு,வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால்,இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ் நீங்கும்அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் (இன்ஷா அல்லாஹ்நிவர்த்தியாகும்.
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலைமாலை சாப்பிட்டு வந்தால்இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்புபடிப்படியாகக் குறைந்து விடும்நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும்தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் (இன்ஷா அல்லாஹ்தீரும்.
துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும்
-பற்கள் கெட்டிப்படும்ஈறுகளின் நோய் தீரும்பற்களின் வலி குறையும்மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது
பித்தத்தைப் போக்க எளிய 'மாதுளைசிகிச்சை!
பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால்முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும்.இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால்ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சிஇதனுடன்மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்துதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால்பித்தநோய்கள் நீங்கும்ஆயாசம் அகலும்வீரிய விருத்திக்கான டானிக் ஆகும்நினைவாற்றல் பெருகும்பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
அதுமட்டுமின்றிஇளம் வயது வயது முதல் வயோதிகம் வரை நம்மில் பலரும் பித்தம் காரணமாக அவதியுறும் நிலை ஏற்படுகிறதுஇதற்கு உணவு முறையும் ஒரு முக்கியக் காரணாமாகிறதுஇந்த அவதியில் இருந்து விடுபட மூலிகை மருத்துவம் பரிந்துரைக்கும் பழ வகைதான் மாதுளம்மாதுளம் பழச் சாற்றுடன்ஒன்றரைப் பங்கு அளவில் வெள்ளைச் சர்க்கரை அல்லது கற்கண்டு இவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்இதை பாகு பதத்தில் காய்ச்சிபின்னர் பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டுஅவ்வப்போது சாப்பிட்டு வரவேண்டும்இப்படிச் செய்யும்பட்சத்தில்பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய எல்லா கோளாறுகளும் (இன்ஷா அல்லாஹ்நீங்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot