அன்புக் குழந்தைகளே! நாங்கள் எதிர்பார்ப்பது..! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

23 ஏப்ரல், 2011

அன்புக் குழந்தைகளே! நாங்கள் எதிர்பார்ப்பது..!


உங்களுக்கு உயர்ந்த இலட்சியத்தைக் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம்.
உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் வண்ணம் நடந்து கொள்ளுங்கள்பெரியவர்கள் அனுபவசாலிகள்ஆகவே (உங்களது நன்மைக்காகவேஅவர்கள் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள்உங்களை நாங்கள் மிகவும் நேசிப்பதை வெளியில் பலரிடமும் காட்டுவதில் எங்களுக்கு மகிழ்ச்சிஅதற்காக நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள்.
உங்கள் திறமையை நாங்கள் மதிக்கிறோம்இருந்தாலும் உங்களுக்குச் சிரமம் தர வேண்டாம் என்றுதான் நாங்களே தலையிட்டுச் சில செயல்களைச் செய்துவிடுகிறோம்அது தவறாபாசத்தின் வெளிப்பாடு என்று தெரிந்து கொள்ளுங்கள்விளையாடுங்கள்முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்லஆனால்உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக்கூடாது என்பதால் நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுகிறோம்பொறுத்துக் கொள்ளுங்களேன்!
செய்சரிநல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார்இடையிலேயே சில வேண்டாம்கூடாது போன்ற கட்டளைகள் வருவது இயல்புதான்அதைப் பெரிதுபடுத்தாதீர்கள் எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம்அதற்காக வருத்தப்பட வேண்டாமே !
நீங்கள் தனிமையை விரும்பலாம்ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வதுஅதனால் நாங்கள் பக்கத்தில் வந்து துணைக்கு நிற்கிறோம்எங்கள் கவலை எங்களுக்குஎங்கள் பெற்றோர் எங்களுக்கு நாங்கள் கேட்டதையெல்லாம் தரவில்லைஅந்த ஏக்கம் இன்றுவரை இருப்பதால் நீங்கள் கேட்டதுமே வாங்கிக் கொடுத்து நிறைவு காண்கிறோம்.
நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்நம்புங்கள்வேறு எங்கு பார்த்திருந்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகள் மீதுதான்நம் வீட்டுத் தொலைபேசியை நீங்கள் பயன்படுத்துவது தவறு என்று நாங்கள் சொல்லவில்லைஆனால்காலம் மாறும் பணத்தின் அருமையைக் கருதி சற்று யோசித்துப் பாருங்கள்.
உன் சகோதரன்சகோதரி உண்மையே பேசி நீ பொய் பேசி வந்தால் ஒப்பீடு செய்ய மாட்டோமாபலருக்கும் உதவி செய்யும் உன் நண்பனைக் குறித்து ஒருவருக்கும் உதவாமல் சுயநலத்தோடு இருக்கும் உன்னிடம் சொல்லிக் காட்ட மாட்டோமாஇது உன்னைத் திருத்தத்தானே தவிர உன்னை வருந்த வைக்க இல்லை.நல்ல பொருளைத் தொலைத்துவிட்டு வந்தால் கொஞ்சவா முடியும்திட்டுவோம்அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான் அவ்வாறு செய்கிறோம்பாசமில்லாத கொடியவர்களா நாங்கள்?
உங்களுக்கு பிடித்த சில உடைகளை வாங்கித் தருகின்றோம்எங்கள் ஆசைக்கு நாங்கள் விரும்பும் சில உடைகளையும் அணிந்தால் என்னசற்று யோசித்துப் பாருங்களேன் உங்களை அரவணைப்பதை விடத் தழுவுவதைவிட உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் இருக்கிறது.அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.
தொலைக்காட்சி பாருங்கள் வேண்டாமென்று தடுக்கவில்லைஅதே நேரத்தில் மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடலாகாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளதுஅதனால்தான் சதா தொலைக்காட்சி பார்க்காதே என்று எச்சரிக்கிறோம்.
உங்களிடம் சுறுசுறுப்புவேலையில் திறமைசுத்த உணர்வு இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா?உங்கள் நன்மைக்குத்தானேநாங்கள் வேலையிலிருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா,இதை நறுக்கித் தரவாஇதைக் கொண்டுபோய் வைக்கவா என்று கேட்டு உதவிசெய்யலாமே உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்துங்கள் உங்கள் ஆற்றலை நாங்கள் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதை எங்களிடம் சொல்லுங்கள்.
வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம்எல்லாம் செய்து கொடுத்துவிட்டு,உங்களிடமிருந்து சாதனைகளை நாங்கள் எதிர்பார்ப்பதில் தவறல்லவே !
நீங்கள் பெரியவர்களான எங்களை கேலி செய்வதாகவோ அவமானப் படுத்துவதாகவோ தோன்றும்படி கூட நடந்து விடாதீர்கள் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாதுஎங்கள் கவலைகளையெல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லைபிஞ்சுகளான உங்களிடம் பிரச்சனைகவலை என்று திணித்து உங்களை வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லைஇது பெருந்தன்மை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்களோடு விளையாட ஆசைதான்சமயம் கிடைக்கும்போது ஆடுவோம்எங்களுக்கு பல வேலைச் சுமைகள் இருக்கின்றபோது எங்களால் வர இயலவில்லை என்றால் எங்கள் நிலைமையை அனுசரித்து நடந்துகொள்வதுதான் உங்களின் புத்திசாலித்தனம்.
உங்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் பெற்றோர்களாகிய நாங்கள் பாடுபடுகின்றோம்.நிறைவேற்றமுடியாது என்றால் வாக்குறுதி தரத் தயங்குவோம்எங்கள் நிதிநிலைமை மற்றும் சந்தர்ப்பம் இவற்றை அறிந்து நடந்து கொள்ளுங்களேன்.
எங்களுடன் சிறிது நேரம் அமர்ந்து எங்கள் பழைய கதைகளைக் கேட்டால் என்னஅதில் எங்கள் உள்ளம் பூரிக்குமே போங்கள் உங்களுக்கு வேறு விஷயமே இல்லை என்று சொல்லிவிட்டு ஓடாதீர்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்வது மிக அவசியம்உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் நட்புக்கு மிகுந்த பங்குண்டுஎனவே உங்கள் நண்பர்களை எங்களிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்துங்கள்.
முடி அமைப்புஉடை இவற்றில் உங்களுக்கு ஏற்றதை நாங்களும் தேர்வு செய்ய அனுமதியுங்கள்.
நாங்கள் தரும் அன்பளிப்பு ரூபாய்களைச் சேமித்து அதிலிருந்து என்றாவது ஒரு நாள் எங்களுக்கும் ஒரு சிறு அன்புப்பரிசு தாருங்கள்அப்போது எங்கள் உள்ளத்தின் களிப்பு கடலைவிடப் பெரிதாகுமே !
உங்களை முழுமையாக நம்புகிறோம்நம்பிக்கை சிதறாமல் நீங்கள் நடந்துகொள்ளுங்கள்நாங்கள் உங்களிடம் சிறு குறைகள் கண்டால் கூட சுட்டிக் காட்டுகிறோம்ஏன் தெரியுமாகுறை நீங்கி நீங்கள் முழுமையான நல்லவர்கள் ஆகத்தான்.
இன்றைய உலகம் போட்டி நிறைந்ததுதிறமை இருப்பவனே முன்னுக்கு வரமுடியும்எங்கள் பிள்ளைகள் திறமைசாலியாகத் திகழ வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதால் மதிப்பெண்ணுக்கும் மதிப்புக் கொடுக்கிறோம்தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
ஒரு வேளையாவது எங்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுங்கள்வயது வளரும்போது இந்த வாய்ப்புகள் குறையலாம்வேலைதிருமணம்என்று ஆகி வெளியே பிரிந்து செல்ல நேரிடலாம்இப்போதாவது அந்த இனிய அனுபவத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கு நாங்கள் சிறந்த பாதுகாவல்எங்களிடம் உங்கள் மனப் புழுக்கத்தைக் கொட்டிவிடுங்கள்.மனதில் வைத்து வேகாதீர்கள்.
உங்கள் நண்பர்களிடம் எங்கள் பெற்றோர் பாசமானவர்கள் நல்லவர்கள் என்பதைச் சொல்லி வையுங்கள்.
நாங்கள் கோபத்தில் ஏதாவது வார்த்தைகளைப் பேசிவிட்டால் சூழ்நிலையை மனதில் வைத்துக்கொண்டு மன்னித்துவிடுங்கள்பின்னர் நீங்கள் அப்படிப் பேசியிருக்க வேண்டாமே என்று எடுத்துச் சொல்லுங்கள்.
காய்கறி வாங்குவதுஅஞ்சலகம் செல்வதுவங்கிக்குச் செல்வது போன்ற சிறுசிறு உதவிகளைச் செய்து பெரும் பெரும் மகிழ்ச்சியை எங்களுக்குத் தரலாமே அதனால் வரைவோலை (டி.டிஎடுப்ப்பது,விண்ணப்பங்களை நிரப்புவதுபணவிடை (எம்.அனுப்புவது இவற்றைப் பற்றிய அறிவும் உங்களுக்குக் கிடைக்குமே உங்கள் தகுதியை நிரூபிக்கவும் வாய்ப்புக் கிடைக்குமேபுத்தகப்புழுவாக மட்டும் இருக்காதீர்கள்.
நண்பர்களுடன் நீங்கள் எங்கும் செல்லலாம்பேசலாம்நாங்கள் அதற்கு அனுமதி தருகிறோம்அது தீய நட்பாநல்ல நட்பா என்று சோதித்து அறிய எங்களுக்கு வாய்ப்புத்தாருங்கள்.
நல்ல சமையல் செய்து பரிமாறினால் அம்மாவைப் பாராட்டுங்கள்அழகான ஓர் ஆடையை வாங்கித் தந்தால் அப்பாவுக்கு அன்புடன் ஒரு முத்தம் தரலாமே நோட்டைத் தைத்துத் தந்த தங்கைக்கு ரோஜாப்பூ ;பட்டன் தைத்துத் தந்த பாட்டிக்கு ஒரு சபாஷ்இப்படி உங்களால் இயன்றதைச் செய்து நன்றியை வெளிப்படுத்தலாமே !
உங்கள் பள்ளியில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தால் நாங்கள் தலையிட மாட்டோம்அது குடும்ப கண்ணியத்தைக் குலைக்காத அளவு பார்த்துக்கொள்ளுங்கள்பெரிதானால் எங்களிடம் சொல்லித் தீர்வு காணுங்கள்.
எங்களுடையது என்று நாங்கள் வைத்துள்ளது எல்லாம் உங்களுக்காகத்தான்அவற்றை உடைத்துப் பழுது செய்து அவற்றின் அருமையை உணராமல் வீசிவிடாதீர்கள்கவனமாகக் கையாளுங்கள்.உங்கள் எதிர்காலம் குறித்து எங்களுக்கும் அக்கறைதொலைநோக்கு உண்டுபத்திரமாக இருப்பதாக உணருங்கள்எங்கள் பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றியே இருக்கும்.
எங்களுக்குக் கிடைக்காத வசதிகளை உங்களுக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம்அதை நினைத்து முகமலர்ச்சியும் மனமகிழ்ச்சியும் கொள்ளுங்கள்.
எங்களைக்குறித்து .....
அன்பும் ஆர்வமும் பாசமும் பரிவும் எதிர்பார்ப்பும் நிறைந்துள்ள பெற்றோர்கள் நாங்கள்இவற்றின் காரணமாக சில சமயம் அதிகத் தலையீடுஅதிகக் கண்டிப்புஅதிகச் செல்லம்அதிகம் குற்றம் குறைகூறல்,அதிக அறிவுரைஅதிக எச்சரிக்கை செய்ய நேரலாம்அதனால்நாங்கள் பொல்லாதவர்கள் அல்லர்நாங்கள் கொடுமைக்காரர்கள் அல்லர்நாங்கள் பிடிவாதக்காரர்களோகட்டுப் பாடுகள் விதிப்பவர்களோ சுயநலவாதிகளோ அல்லர்நாங்கள் சர்வாதிகளோ பழமைவாதிகளோ அல்லர்.
எங்கள் கண்மணிகளே !
உங்களை நல்ல பிள்ளைகளாகவல்லவர்களாகஒழுக்க மானவர்களாகவீரம் மிக்கவர்களாகவிவேகம் உள்ளவர்களாககண்ணியமானவர்களாகபுகழத்தக்கவர்களாக ஆக்குவதே எங்கள் வாழ்வின் நோக்கம்.எங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்காகவேஎங்கள் வாழ்வே உங்களுக்காகத்தானே !
புரிந்துகொண்டு மதித்து வாழ்ந்தால் போதும் வேறென்ன வேண்டும் எங்களுக்கு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot