'இந்திய மனித உரிமை நிலவரம்' - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

3 பிப்ரவரி, 2011

'இந்திய மனித உரிமை நிலவரம்'


பயங்கரவாத சந்தேக நபர்களை இந்திய பொலிஸார் சித்ரவதை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு இந்தியாவின் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மறுசீரமைப்பு தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

சந்தேக நபர்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவது முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லுகின்ற நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, அப்படியான அதிருப்தி, தீவிரவாத அமைப்புக்களின் ஆட்சேர்ப்புக்கு வலுவூட்டலாம் என்றும் கூறியுள்ளது.

கடந்த தசாப்த காலத்தில் பல இந்திய நகரங்கள் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. சந்தைகளும், ரயில் வண்டிகளும், கோயில்களும் மற்றும் மசூதிகளும் இலக்கு வைக்கப்பட்டன.

இந்தத் தாக்குதல்களில் பலவற்றுக்கு இந்திய முஜாஹிதீன் அமைப்பு மீதே குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த அமைப்பு இந்தியாவிலேயே உருவான ஒன்று என்று பொலிஸார் கூறுகிறார்கள்.

இப்படியான ஒவ்வொரு தாக்குதலின் பின்னரும் சந்தேக நபர்கள் அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்படுகிறார்கள். இவர்களில் சிலர் பின்னர் அந்த தாக்குதல்களுடனான தமது தொடர்பு குறித்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதும் உண்டு.

ஆனால், இப்படியான பல குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் சந்தேக நபர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரேயே பெறப்படுவதாக ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகின்றது.

2008 இல் 150 பேருக்கும் அதிகமானோர் பலியாக காரணமான மூன்று தாக்குதல்களுக்கு பின்னரான நிகழ்வுகள் குறித்து தாம் ஆய்வுகளை நடத்தியதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

இதற்கு அரசாங்கம் கருத்து கூறாது என்று ஒரு அரசாங்க தரப்பு பேச்சாளர் கூறியுள்ளா
ர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot