பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

3 பிப்ரவரி, 2011

பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.


செய்முறை தேர்வு (PARATICAL EXAM)

ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு முன்னதாக மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெறும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு வருகிற 3-ந் தேதி(வியாழக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி(வெள்ளிக்கிழமை)-யுடன் முடிவடைகிறது. அந்தந்த பள்ளிகளின் வசதிக்கேற்ப செய்முறை தேர்வு நடக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் 165 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 538 மாணவ, மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுகிறார்கள். இதில் கடலூர் கல்வி மாவட்டத்தில் 110 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 298 மாணவர்களும், 10 ஆயிரத்து 666 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 955 மாணவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 55 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 974 மாணவர்களும், 3 ஆயிரத்து 69 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 583 மாணவர்களும் எழுதுகிறார்கள்.
ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் செய்முறை தேர்வுகளை சிறப்பாக நடத்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடந்தது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, செய்முறை தேர்வுக்கான வினாத்தாள்களையும் வழங்கினார்.

இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் பாரதமணி(கடலூர்), பத்ரு(விருத்தாசலம்), மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள்மொழி, முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 165 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டன
ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot