முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்! - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

15 மே, 2011

முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்தான் குண்டு வைத்தது: திக்விஜய்!



முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டுகளை வெடிக்கச் செய்தது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திக் விஜய் சிங், உத்திரப் பிரதேச மாநிலம் மெயின்பூரி என்ற இடத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு திக் விஜய் சிங் பேசினார்.

முஸ்லிம்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது. குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின், நாட்டில் குண்டு வெடிப்புகள் நிகழ்வது நின்றுவிட்டது என்று திக் விஜய் சிங் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாடுகளுக்கு எதிராக கண்டம் தெரிவித்து அறிக்கை எதனையும் முலாயம் சிங் ஒரு முறை கூட வெளியிடவில்லை என்று திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.

முலாயம் சிங், மாயாவதி மற்றும் பாஜக ஆகியோர் மக்களை ஜாதீய ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிக்கின்றனர் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot