மாணவிகளுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 6 பெண்களை மனித கழிவு சாப்பிட வைத்து தண்டனை: 2 நாட்களாக நிற்க வைத்து சித்ரவதை - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*
top_banner

3 மே, 2011

மாணவிகளுக்கு பில்லி சூனியம் வைத்ததாக 6 பெண்களை மனித கழிவு சாப்பிட வைத்து தண்டனை: 2 நாட்களாக நிற்க வைத்து சித்ரவதை

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

?ui=2&ik=b6959fca06&view=att&th=12f9ea58dbecbe75&attid=0
ஒரிசா மாநிலத்தில் உள்ள குக்கிராமமான சுனா முண்டாவில் உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு பரீட்சை நடந்தபோது சுனா முண்டா மற்றும் பல்சா குதார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 13 மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. அந்த மாணவிகளுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் போல் அவர்கள் நடந்து கொண்டனர்.
இதைப்பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர் டாக்டர்களிடம் அழைத்துச்சென்று மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். என்றாலும் அவர்கள் குணமடையாததால் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். அவர் மாணவிகளுக்கு சிலர் பில்லி சூனியம் வைத்து இருப்பதால் பேய் பிடித்து இருப்பதாகவும் மந்திர கட்டில் மூலம் யார் சூனியம் வைத்தார்கள் என்பதை கண்டுபிடித்து விடுவதாகவும் கூறினார்.
இதையடுத்து கட்டாக் நகரில் இருந்து அந்த மந்திரவாதி ஒரு கட்டில் வாங்கி வந்து இதுதான் மந்திரகட்டில் என்று கூறி மாணவிகளின் பெற்றோரை நம்ப வைத்தார். 13 மாணவிகளையும் வரவழைத்து மந்திரவாதி பூஜை செய்தார். டாக்டர்களால் முடியாததை மந்திரவாதி செய்து விடுவார் என்று நம்பிய பெற்றோருக்கு ஏமாற்றமே கிடைத்தது.
மாணவிகளுக்கு உடல்நலம் குணமாகவில்லை. மேலும் அதே ஊரைச் சேர்ந்த குடும்பத்தினர் மீது பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.அவர்கள்தான் பில்லி சூனியம் வைத்து இருக்கலாம் என்று கருதி கிராமமக்கள் திரண்டு சென்றனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த மதுசூதன் ரானாஅவரது மனைவி நிர்மலா,மகள் சந்தியாஈஸ்வர் அவரது மனைவி தலிம்பாமகள்கள் கமலா,ஹேமலதாதுகி ஆகிய பேரை பிடித்து வந்து ஊருக்கு நடுவில் நிற்க வைத்தனர். அவர்களை பன்றி மற்றும் மனித கழிவுகளை சாப்பிட வைத்து சித்ரவதை செய்தனர்.
நாட்களாக அங்கேயே நிற்க வைத்து கொடுமைப்படுத்தினார்கள். இதன்மூலம் அவர்கள் வைத்த பில்லிசூனியத்தின் சக்தி குறைந்துவிடும் என்று நம்பினார்கள்.
கிராம மக்களிடம் இருந்து தப்பிய ரானா இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கிராமமக்களிடம் இருந்து 2குடும்பத்தினரையும் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad