அம்மா என்றொரு அழகான தேவதை - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*
top_banner

29 மார்ச், 2011

அம்மா என்றொரு அழகான தேவதை

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2071%20%20%206%20962
நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்
நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்
உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்
எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்

பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே
தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே
அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே
பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே

கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும்
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும்
உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று
சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே

மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து
உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும்
பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி
முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே

அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து
பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று
திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து
படுக்க போகும்வரை பாடு பட்டவளே

எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க
படாத பாடுபட்டு பரிதவித்த போதும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து
உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே

பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும்
விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும்
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து
குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே

அம்மா என்று அழைத்தாலே போதும்
கவலைகள் எல்லாம் கரைந்து போகும்
கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும்
அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad