அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள்... - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

26 ஜூன், 2011

அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள்...


அன்று நீ...!
அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் !
அதுதான் உன் மரணநாள்

அன்று நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று!

அன்று நீ கண்மூடும் முன் பார்த்த பார்வையும்
உன் இறுதிப் பார்வையென எண்ணியிருக்கமாட்டாய்!

அன்று உன் உறவினர்களும் நண்பர்களும் அழுதாலும்
உன்னைக் காப்பாற்ற யாராலும் இயலாது!

அன்று அனைவரின் அழுகையும் உன் முடிவினால் என்றாலும்
நீ உலகைப் பிரியும் கடைசி நொடி - உனக்குள்

அன்று நீ அழுவதோ/சிரிப்பதோ
உன் நல்ல/தீய செயல்களைப் பொறுத்தே அமையும்!

அன்று உன்னால் குளிக்க இயலாது - ஆனால்
நீ குளிப்பாட்டப்படுவாய்!

அன்று உன்னால் ஆடை அணிய இயலாது - ஆனால்
நீ ஆடை அணிவிக்கப்படுவாய்!

அன்று நீ யாரையும் பார்க்க இயலாது - ஆனால்
நீ அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுவாய்!

அன்று உன்னால் பள்ளிக்குச் செல்ல இயலாது - ஆனால்
நீ பள்ளிக்கு கொண்டுச் செல்லப்படுவாய்!

அன்று உன்னால் தொழ இயலாது - ஆனால்
நீ முன்னால் வைக்கப்பட்டு உனக்காக தொழுகை நடத்தப்படும்!

அன்று உன்னால் இறைவனிடம் பிரார்த்திக்க இயலாது
நீ ஈடேற்றம் அடைய உனக்காக பிரார்த்திக்கப்படும்!

அன்று முதல் உன் குடும்பத்தினரோடு பஞ்சணையில் உறங்க இயலாது
நீ மண்குழிக்குள் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவாய்!

அன்று உன்னால் வீட்டிற்கு திரும்பி வர இயலாது - ஆனால்
உன்னை விட்டுவிட்டு உன் உறவினர்கள் வீடு திரும்பிவிடுவார்கள்!

அந்த 'அன்று' இன்றாகக் கூட இருக்கலாம் - அதற்காக
உன் ஏக இறைவனை அஞ்சி தயாராகிக்கொள்!

அல்குர்ஆனின் சில வசனங்கள்:
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியான கோட்டைகளில் இருந்தபோதிலும் சரியே!" [அல்குர்ஆன் 4:78]
மனிதர்களே! உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்துக் கொள்ளுங்கள். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் அவ்விருவரிலிருந்து, ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்; எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 4:1]
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சித்துப் பார்ப்பதற்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். [அல்குர்ஆன் 21:35]
நிச்சயமாக நாமே உயிர் கொடுக்கிறோம்; நாமே மரிக்கும்படிச் செய்கிறோம். மேலும் நம்மிடமே (எல்லோரும்) மீண்டு வரவேண்டியிருக்கிறது. [அல்குர்ஆன் 50:43]
அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் எனக் கருதியோர் நிச்சயமாக நஷ்டம் அடைந்துவிட்டனர். திடீரென அந்த (மறுமை நாள்) நேரம் அவர்களிடம் வரும்பொழுது 'உலகில் நாங்கள் வரம்பு மீறி நடந்துக் கொண்டதால் எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே!' என்று கூறுவார்கள். மேலும் தங்கள் முதுகுகளின் மேல் தங்கள் (பாவச்)சுமைகளை அவர்கள் சுமப்பார்கள். அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். [அல்குர்ஆன் 6:31]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot