பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜம் ஜம் கிணறு - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

26 ஜூன், 2011

பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜம் ஜம் கிணறு


முதுவைக் கவிஞர் அல்ஹாஜ் ஏ. உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ
வெற்றியின் இரகசியம்
ஆயிரம் அடிகள் தோண்டிய போதும்
அனுலும் வெப்பமும் பாலையில் பொங்கும் !
தூயவர் இஸ்மாயீல் ( அலை ) பிஞ்சுப் பாதம்
தோண்டிய ‘ஜம்ஜம்’ அதிசயம் அன்றோ ?

கானல் நீரைக் கண்டதும் ஹாஜரா ( அலை )
கலங்கி ஓடிய சோதனைக் காண்டம்
வீணாய் இல்லை ! விளைந்தது சரித்திரம் !
வேதனை, சோதனை வெற்றியின் (இ)ரகசிய்ம் !

பஞ்சை மிஞ்சும் பிஞ்சுப் பாதம்
பறித்தது ஒரு சாண் ஆழமும் இல்லை !
பஞ்சம் நீங்கிடப் பொங்கிய தண்ணீர்
படைத்தவன் அல்லாஹ் அருளின் எல்லை !

பாலையில் பொங்கிய நீரும் அதிசயம் !
பொங்கிய நீரோ நின்றதும் அதிசயம் !
பாலையைப் பெருக்கிப் பாரினில் புகுந்தால்...
பூமியின் உலகே அழிந்திடும் அவசியம் ?

ஆயிரம் (இ)லட்சம் அருவிகள் இருந்தும்
அகிலம் முழுவதும் அந்நீர் இல்லை !
சேயும் தாயும் தோண்டிய ( ? ) தண்ணீர்
சேரா நாடுகள் உலகில் இல்லை

இத்தனை ஆண்டுகள் கடந்தன பாரீர் !
இதுவரை கலங்கல் கிருமிகள் இல்லை !
சொத்தென நினைத்து வைத்தவர் எல்லாம்
சுகந்தரும் மருந்தாய் அம்ருந்துதல் உண்மை !

பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜம் ஜம் கிணறு
ஜம் ஜம் கிணறு. இப்போது மக்கா நகரமாக இருக்கும் இந்த இடம் ஊராக உருவாவதற்கு முன், முதன் முதலில் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது மனைவியையும், கைக் குழந்தையான மகன் இஸ்மாயீலையும் இறைக் கட்டளைப்படி இங்கே குடியமர்த்தினார்கள்.
குழந்தை தாகத்தால் தவித்த போது இஸ்மாயீலின் தாயார், ஸஃபா மர்வா என்னும் இரு மலைக் குன்றுகள் மீதும் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக ஓடி ஏறி, ஏதாவது வணிகக் கூட்டம் செல்கின்றதா? என்று பார்த்தார்கள். அவர்களிடம் தண்ணீர் வாங்கி குழந்தையின் தாகத்தை தணிக்க எண்ணினார்கள்.
அதற்கிடையே அல்லாஹ், குழந்தை கிடந்த இடத்தில் அற்புத நீரூற்றை ஏற்படுத்தினான்.எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப் போகாத தன்மை இந்த ஜம்ஜம் நீருக்கு உண்டு. இங்கே கால் கோடிக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் பயன்படுத்தியும், கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் இந்தக் கிணறு ஊறிக் கொண்டே இருக்கிறது. இஸ்லாம் மெய்யான மார்க்கம் என்பதற்குச் சான்று பகர்ந்துக் கொண்டிருக்கிறது.
தோண்டுகின்ற இடமெல்லாம் எண்ணெய்க் கிணறுகள் தோன்றுகின்ற இந்தப் பாலைவன மணலில், இது ஒரு வரலாற்று அற்புதம். நாள் தோறும் வருகின்ற பல்லாயிரக் கணக்கான மக்களுக்கும், ஆண்டு தோறும் கூடுகின்ற அத்தனை இலட்சம் பேருக்கும் தாகம் தணிக்கிறது இக்கிணறு. அதிக சக்தியுள்ள இயந்திரங்கள் மூலம் அனுதினமும் நீர் வெளியேற்றப்படுகிறது.
அள்ள அள்ளக் குறையாத இப்பேரற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவன் பேராற்றலுடையவன்.
சுற்றிலும் கண்ணாடித் தடுப்புகளால் அரண் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ள இக்கிணற்றின் மிக அருகில் சென்று பார்க்கும் ஹாஜிகள் இறைவனின் மாபெரும் அற்புதத்தை எண்ணி வியக்கின்றனர்.
இந்த ஜம்ஜம் கிணறு இருக்கும் பகுதியும், பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.
தரைப் பகுதியில் படிகள் அமைத்து உள்ளே சென்று பார்க்கவும், தண்ணீர் அருந்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும், தனித் தனியாக பாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. தவாபை முடித்து - தொழுகையையும் நிறை வேற்றிய ஹாஜிகள், கூட்டம் கூட்டமாகச் சென்று தண்ணீர் அருந்துகின்றனர். பிரார்த்தனை அங்கீகரிக்கப் படும் இந்த கிணற்றடியில் நின்று பிரார்த்திக்கின்றனர். வயிறும் மனதும் நிறைந்தவர்களாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot