''என் பெயரால் பொய் கூறாதீர்கள்!'' நபி صلى الله عليه وسلم - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.........*

23 ஜூன், 2011

''என் பெயரால் பொய் கூறாதீர்கள்!'' நபி صلى الله عليه وسلم


சாதாரண பாமரன் பொய் சொல்லும் நிலை மாறி, சில ஆலிம்கள் தங்கள் 'வாதம்' வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்லது முழுக்க முழுக்க சுயஆதாயத்துக்காக ''இறையச்சத்தை தூக்கி எரிந்துவிட்டு'' துணிந்து பொய் சொல்ல ஆரம்பித்துள்ளனர்அவர்களுக்கும் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு என்பதை நினைவு படுத்தும் விதமாக...
o என் பெயரால் பொய் கூறாதீர்கள்! ஏனென்றால் என் பெயரால் பொய் கூறுவது நரகில் சேர்க்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்) 
யார் என் பெயரால் பொய் கூறுகிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'வேண்டுமென்றே' என்ற வார்த்தையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நான் நினைக்கின்றேன் என்று அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)
யார் என்மீது திட்டமிட்டு பொய் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்) 
நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா)
என்னைப் பற்றி அதிகமாக அறிவிப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், என் பெயரால் சொல்வதென்றால் உண்மையையே சொல்ல வேண்டும், நான் சொல்லாத ஒன்றை என் பெயரால் எவரேனும் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மிம்பர் (படி) மீது இருந்து கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ((நூல்: இப்னு மாஜா, அஹ்மத், தாரிமி)
இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு மற்றும் சிலரிடம் நான் (ஹதீஸ்களைக்) கேட்பது போல், நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக எந்த ஒன்றையும் கூற நான் கேட்டதில்லையே! அது ஏன் என்று ஸுபைர் இப்னுல் அவாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் 'நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பிரிந்தது இல்லை, எனினும் 'யார் என் பெயரால் பொய் கூறினானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு சொல்லை நான் செவியுற்றுள்ளேன். (அதற்கு அஞ்சியே நான் அதிகமாக அறிவிப்பதில்லை) என்று ஸுபைர் இப்னுல் அவாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக,
அவரது மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.(நூல்: இப்னு மாஜா, புகாரி)
யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, முஸ்லிம்)
நிச்சயம் பொய் தான் என்று தெரிந்து கொண்டே என் பெயரால் யாரேனும் ஒரு செய்தியைக் கூறினால் அவனும் பொய்யர்களில் ஒருவனாவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா)
மேற்கூறிய இதே ஹதீஸே ஸமுரத் இப்னு ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாகவும், முகீரா இப்னு ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாகவும் இடம் பெற்றுள்ளது. (குறிப்பு: இந்த ஹதீஸ்கள் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot