(2) தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நபித்தோழர் முஆவியா رَضِيَ اللَّهُ عَنْهُ - உமர் இல்லம் UMAR HOME
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...*இவ்வலைப்பூவில் உள்ள அனைத்து குர்ஆன் ஆயத்துக்களும், நபிமொழிகளும் பிற தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதாகும். அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!ஆமீன்..ஆமீன்....உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?....*

புதியது

Post Top Ad

அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்...

18 ஜூன், 2011

(2) தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நபித்தோழர் முஆவியா رَضِيَ اللَّهُ عَنْهُ


முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி நபித்தோழர்கள் சொன்னவை
அப்துல்லாஹிப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பின்வருமாறு புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
التاريخ الكبير 1405 عن معمر قال سمعت همام بن منبه عن بن عباس قال ما رأيت أحدا أخلق من معاوية
முஆவியாவை விட நற்குணமிக்க ஒருவரை நான் காணவில்லை. (ஆதாரம்: அத்தாரீஹுல் கபீர் 1405)
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும் போது
...... .اللَّهُمَّ إِنِّى أُشْهِدُكَ عَلَى أُمَرَاءِ الأَمْصَارِ وَإِنِّى إِنَّمَا بَعَثْتُهُمْ عَلَيْهِمْ لِيَعْدِلُوا عَلَيْهِمْ وَلِيُعَلِّمُوا النَّاسَ دِينَهُمْ وَسُنَّةَ نَبِيِّهِمْ -صلى الله عليه وسلم- وَيَقْسِمُوا فِيهِمْ فَيْئَهُمْ وَيَرْفَعُوا إِلَىَّ مَا أَشْكَلَ عَلَيْهِمْ مِنْ أَمْرِهِمْ ...’
‘..... யா அல்லாஹ் நகரங்களுக்கு பொறுப்பான தலைவர்கள் விடயத்தில் உன்னை நான் சாட்சியாக்குகின்றேன். அந்தத் தலைவர்களை நான் அனுப்பியதெல்லாம் மக்களிடையே நீதியை நிலை நாட்டுவதற்கும், மார்க்கத்தையும், நபியின் நடைமுறையையும் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கும், யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதற்கும், மக்களிடையே ஏற்படும் சச்சரவுகளை எனக்கு எத்தி வைப்பதற்கும்தான்....’ (அறிவிப்பவர்: அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம் 1286)
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய இந்த துஆவில் அவரும் அடங்குகின்றார்
உமர் ரலியல்லாஹு அன்ஹு, உஃத்மான் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோரின் ஆட்சிக் காலம் முழுவதும் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவுக்கு கவர்னராகவிருந்துள்ளார்கள். அதற்குப் பிற்பட்ட காலங்களிலும் நீண்ட காலமாக சிரியாவை நிருவகித்துள்ளார்கள். இக்காலப் பகுதிகளில் எந்த வகையிலும் சிரியாவாசிகள் அவருடைய ஆட்சியைக் குறைகூறவோ, அதற்கெதிராகக் கிளர்ந்தெழவோ எதுவும் செய்யவில்லை. அவரின் தலைசிறந்த நிருவாகத் திறமைதான் இதற்குக் காரணமாகும். இதை முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். ‘என் தோழர்கள் எப்படியென்றால் அவர்கள் பறந்தால் நான் விழுவேன். நான் பறந்தால் அவர்கள் விழுவார்கள்’ அதாவது சரியான முறையில் தான் மக்களை நிருவகித்துள்ளதை அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஒரு முறை நபித்தோழர்களெல்லாம் ரோம், பாரசீக மன்னர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அதைப் பார்த்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்:
عن سعيد المقبري قال قال عمر بن الخطاب تذكرون كسرى وقيصر ودهاءهما وعندكم معاوية‘
முஆவியா உங்களுடன் இருக்கும் போதா நீங்கள் ரோம், பாரசீக மன்னர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஸஈதுல் மக்பரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆதாரம்: தாரீஹுத் தபரீ (3 – 264)(تاريخ بغداد – 1 – 209 )
عن الزهري قال أخبرني عروة بن الزبير ان المسور بن مخرمة أخبره انه قدم وافدا على معاوية بن أبي سفيان فقضى حاجته ثم دعاه فاخلاه فقال يا مسور ما فعل طعنك على الأئمة فقال المسور دعنا من هذا وأحسن فيما قدمنا له قال معاوية لا والله لتكلمن بذات نفسك والذي تعيب علي قال المسور فلم أترك شيئا أعيبه عليه إلا بينته له قال معاوية لا بريء من الذنب فهل تعد يا مسور مالي من الإصلاح في أمر العامة فان الحسنة بعشر أمثالها أم تعد الذنوب وتترك الحسنات قال المسور لا والله ما نذكر إلا ما ترى من هذه الذنوب قال معاوية فانا نعترف لله بكل ذنب أذنبناه فهل لك يا مسور ذنوب في خاصتك تخشى أن تهلكك إن لم يغفرها الله قال مسور نعم قال معاوية فما يجعلك أحق ان ترجو المغفرة مني فوالله لما الي من الإصلاح أكثر مما تلي ولكن والله لا أخير بين أمرين بين الله وبين غيره إلا اخترت الله تعالى على ما سواه وإنا على دين يقبل الله فيه العمل ويجزي فيه بالحسنات ويجزي فيه بالذنوب إلا أن يعفو عمن يشاء فانا احتسب كل حسنة عملتها بأضعافها وأوازي أمورا عظاما لا أحصيها ولا تحصيها من عمل الله في إقامة صلوات المسلمين والجهاد في سبيل الله عز و جل والحكم بما انزل الله تعالى والأمور التي لست تحصيها وان عددتها لك فتفكر في ذلك قال المسور فعرفت ان معاوية قد خصمني حين ذكر لي ما ذكر قال عروة فلم يسمع المسور بعد ذلك يذكر معاوية إلا استغفر له
அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவர்களினால் விளைந்த சில தவறுகளை கூறிய மிஸ்வரிப்னு மஹ்ரமா என்ற தாபிஈ தனது தேவையொன்றுக்காக முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் செல்கிறார். அப்போது முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரிடம் ‘மிஸ்வரே தலைவர்களைப் பற்றி நீர் என்ன குறைகளைக் கூறினீர்’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘அதை விடுங்கள். நாம் எதற்காக வந்தோமோ அது இதை விட நல்லது’ என்று சொன்னார். அதற்கு முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘அல்லாஹ் மீது ஆணையாக நீங்கள் என் மீது குறைகண்ட அனைத்து விடயங்களை இங்கு சொல்ல வேண்டும்’ என்று கூறினார்கள். ‘நான் எதையெல்லாம் அவரிடமுள்ள குறையாகக் கண்டேனோ அவையனைத்தையும் அவரிடம் கூறினேன்’ என்று மிஸ்வர் கூறினார்.
அதற்கு முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நான் பாவங்களிலிருந்து நிரபராதியல்ல. மிஸ்வரே எனது நல்ல காரியங்களை விட்டு விட்டு எனது தனிப்பட்ட பாவங்களை நீர் கணக்கிடுகிறீரா அல்லது ஆட்சிப்பொறுப்பில் நான் விட்ட தவறுகளை நீர் கணக்கிடுகிறீரா’ எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘அல்லாஹ் மீது ஆணையாக உமது தனிப்பட்ட பாவங்களைப் பற்றி நான் பேசவில்லை’ என்று கூறினார். அதற்கு முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நாம் செய்த அனைத்துப் பவங்களையும் அல்லாஹ்வுக்காக ஏற்றுக் கொள்கின்றோம். மிஸ்வரே அல்லாஹ் மன்னிக்காவிட்டால் உனக்கு அழிவை ஏற்படுத்தும் என்று நீ பயப்படக் கூடிய தனிப்பட்ட பாவங்கள் உங்களுக்கு உண்டா’ எனக் கேட்டார்கள்.
அதற்கு மிஸ்வர் ‘ஆம்’ என்று கூறினார். அதற்கு முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘என்னை விட உங்களை அல்லாஹ் மன்னிக்க வேன்டும் என்று ஏன் நீர் ஆசைப்படுகிறீர். உமக்குள்ள பொறுப்புக்களை விட எமக்குள் பொறுப்புக்கள் அதிகமாகும். அல்லாஹ் மீது ஆணையாக அல்லாஹ்வா அல்லது ஏனையவைகளா என்று வருகின்ற போது அல்லாஹ்வையே நான் தேர்ந்தெடுத்தேன். நன்மைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கூலி வழங்கப்பட்டு, அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டாலே தவிர தீமைகளுக்காகத் தண்டனை வழங்கப்படும் மார்க்கத்தில் நாம் இருக்கின்றோம்ஸஸ.’ என முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிஸ்வரிடம் கூறினார்கள். அன்றிலிருந்து மிஸ்வரிடம் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி கூறப்பட்டால் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுபவராக இருந்தார். (அறிவிப்பவர் : உர்வதிப்னு ஸுபைர், ஆதாரம்: தாரீஹு பக்தாத்)
தனது குறை சுட்டிக்காட்டப்பட்ட போது பணிவாக அவற்றை ஏற்றுக் கொண்டு, ஆணவமின்றி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கு பதில் கூறிய முறையிலிருந்து முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இறையச்சத்தையும் நிருவாகத் திறமையையும் காணலாம்.
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிக் கூறும் போது ‘எனக்கு நீண்ட ஆயுலிருந்தால் அதில் ஒரு பகுதியை முஅவியாவுக்குக் கொடுக்க ஆசைப்படுகின்றேன்.’ என்று கூறனார்கள்.
ஒரு முறை அப்துல்லாஹிப்னு முபாரக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் உமரிப்னு அப்துல் அஸீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சிறந்தவரா? முஆவியாவா சிறந்தவரா? என்று கேட்கப்பட்டது. அதற்கவர் ‘உமரிப்னு அப்துல் அஸீஸ் போன்ற ஆயிரம் பேர்தான் வந்தாலும் அவர்களை விட நபியவர்களோடு இருந்த முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மூக்கினுள் நுழைந்த தூசி சிறந்தது’ என்று கூறினார்.
تاريخ الأمم والرسل والملوك- الطبري – (3 265 )
عن علي بن محمد قال حدثنا أبو محمد الأموي قال خرج عمر بن الخطاب إلى الشأم فرأى معاوية في موكب يتلقاه وراح إليه في موكب فقال له عمر يا معاوية تروح في موكب وتغدو في مثله وبلغني أنك تصبح في منزلك وذوو الحاجات ببابك قال يا أمير المؤمنين إن العدو بها قريب منا ولهم عيون وجواسيس فأردت يا أمير المؤمنين أن يروا للإسلام عزا فقال له عمر إن هذا لكيد رجل لبيب أو خدعة رجل أريب فقال معاوية يا أمير المؤمنين مرني بما شئت أصر إليه قال ويحك ما ناظرتك في أمر أعيب عليك فيه إلا تركتني ما أدري آمرك أم أنهاك
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவுக்குச் சென்ற போது அலங்கரிக்கப்பட்ட ஒட்டகமொன்றில் சில படை வீரர்கள் புடை சூழ, முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வருவதைக் கண்டார்கள். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஅவியாவைப் பார்த்து ‘ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ஒட்டகத்தில் வருகிறீர் போகிறீர் ஆனால் வறியவர்கள் உன் கதவடியில் காத்துக்கிடப்பதாக செய்தி கிடைத்துள்ளதே’ என்று கேட்டார்கள்.’
அதற்கு முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முஃமின்களின் தலைவரே எதிரிகள் நமக்கருகிலுள்ளனர். அவர்களின் ஒற்றரர்களும், உளவாளிகளும் நமை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்லாத்துக்கென்று ஒரு கௌவரம் இருக்கின்றது, முஸ்லிம்கள் இப்படியெல்லாம் உயர்தரமானவர்கள் என்று அவர்களுக்குக் காட்டுவதற்காகத்தான் நான் இவ்வாறு செய்கின்றேன்.’ எனக் கூறினார்கள்.
அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘இது சிந்தனை மிக்க ஒருவர் செய்யும் சதியாகும் அல்லது விவேகியொருவரின் தந்திரமாகும்’ என்று கூறினார்கள். அதற்கு முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘முஃமின்களின் தலைவரே நீங்கள் எதை ஏவினாலும் அதைச் செய்ய நான் தயாராகவுள்ளேன்’ என்று கூறினார்கள்.
அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘நான் எதை உமக்கு குறையாய்க் கண்டாலும் தர்க்கித்து என்னை மிகைத்து விடுகின்றீர் அதனால் உமக்கு எதை ஏவுவது? எதைத் தடுப்பது? என்பது பற்றி எனக்கும் ஒன்றும் புரியவில்லை’ எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ முஹம்மத் அல் உமவீ, ஆதாரம்: தாரீஹுத் தபரீ (3 – 265)
முஆவியா மற்றும் அலி ரலியல்லாஹு அன்ஹும் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சனையும் இருவரின் பேணுதலும்
ஒரு முறை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரவு நேரத்தில் கையில் தீப்பந்தமொன்றை ஏந்தியவர்களாகப் பள்ளிக்கு எதையோ தேடினார்கள். ஏன் வந்தீர்கள் என்று விசாரிக்கப்பட்ட போது ‘பகலில் எச்சில் துப்பியது நினைவுக்கு வந்தது அதை அகற்றுவதறகாக வந்தேன்’ என்று கூறினார்கள். மார்க்க விடயங்களில் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கிருந்த பற்றுதலை இது காட்டுகின்றது.
عن عبد الله بن بريدة قال :’ خرج معاوية فرآهم قياما لخروجه ، فقال لهم : اجلسوا فإن رسول الله صلى الله عليه وسلم قال : من سره أن يقوم له بنو آدم ، و جبت له النار
ஒரு முறை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியேறிய வேளை அவரின் வருகைக்காக சிலர் எழுந்து நின்றதைக் கண்ட முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களைப் பார்த்து ‘அமருங்கள். ஆதமுடைய மக்கள் தனக்காக எழுந்து நிற்பது யாருக்கு சந்தோசமளிக்கின்றதோ அவனுக்கு நரகம் கடைமையாகி விட்டது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
மரியாதைக்காக எழுந்து நிற்பது தலைவர்களுக்கு செய்ய வேண்டிய மிகப்பெரும் தொண்டு என்று உலகமே அதை ஒரு சம்பிரதாயமாக மாற்றியுள்ள போது இவ்வாறான நடைமுறைகள் ஏற்கத்தக்கதல்ல என இஸ்லாம் கூறுகின்றது. எனவே தனக்கு முன்னால் அவ்வாறான ஒரு தவறு நடைபெற்ற போது தயவு, தாட்சண்யமின்றி முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உடனேயே அதைத் தடுத்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவுக்கு மார்க்க விடயத்தில் மிகுந்த அவதானிப்போடு அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஆட்சிக்கு ஆசைப்பட்டுத்தான் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களோடு பேரிட்டார்கள் என்று கூறப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் உண்மை அதுவல்ல. இரு தரப்பு வாதங்களும் நியாயமாகவே இருந்தன. மாறுபட்ட சந்தர்ப்ப சூழல்களே அசாதாரண நிலைமைகளைத் தோற்றுவித்தன என்பதை வரலாற்றைப் படிக்கும் போது புரிந்து கொள்ளலாம். முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியை மையமாக வைத்து அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களோடு பேரிடவில்லை அதைப் பின்வரும் செய்தி தெளிவாகச் சொல்கின்றது.
البداية والنهاية – (7 – 260وخرج أبو الدرداء وأبو أمامة فدخلا على معاوية فقالا له يا معاوية علام تقاتل هذا الرجل فوالله إنه أقدم منك ومن أبيك إسلاما وأقرب منك إلى رسول الله صلى الله عليه و سلم وأحق بهذا الأمر منك فقال أقاتله على دم عثمان وإنه آوى قتلته فاذهبا إليه فقولا له فليقدنا من قتلة عثمان ثم أنا أول من بايعه من أهل الشام
அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ‘முஆவியாவே உம்மை விடவும், உம் தந்தையை விடவும் இஸ்லாத்தால் முந்திய, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உம்மை விட மிக நெருக்கமான, ஆட்சிக்கு உம்மை விடத் தகுதியான இந்த மனிதருடனா நீர் போர் செய்யப் போகின்றீர்’ எனக் கேட்டார்கள். அதற்கு முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘உஃத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொலை செய்யப்பட்டதற்காகவே நான் அவரோடு போர் செய்யப் போகின்றேன். ஏனென்றால் அவர் உஃத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொலை செய்தவர்களுக்கு புகலிடம் கொடுத்துள்ளார். நீங்களிருவரும் அவரிடம் சென்று உத்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கொலை செய்தவர்களைத் தண்டிக்க சொல்லுங்கள். அவ்வாறு அவர் செய்தால் ஷாம் தேசத்திலிருந்து முதன் முதலில் அவருக்கு பைஅத் செய்வது நானே’ என முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு ஆதாரம் : தாரீஹு திமிஷ்க்)
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பற்றி முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ள கீழ் வரும் செய்தியொன்றே போதுமெனலாம்.
.تاريخ دمشق – (24 402)عن محمد بن غسان الكندي قال دخل ضرار بن ضمرة النهشلي على معاوية فقال له معاوية صف لي عليا يا ضرار قال أو تعفيني من ذلك يا أمير المؤمنين قال أقسمت عليك لتفعلن قال أما إذا أتيت فنعم كان والله بعيد المدى شديد القوى يتفجر العلم من جوانبه وتنطق الحكمة على لسانه يستوحش من الدنيا وزهرتها ويأنس بالليل ووحشته كان طويل الفكرة غزير الدمعة يقلب كفه ويخاطب نفسه وكان فينا كأحدنا يقربنا إذا أتيناه ويجيبنا إذا دعوناه ونحن مع قربه منا وتقريبه إيانا لا نبتديه لعظمته ولا نكلمه لهيبته فإن تبسم فعن مثل اللؤلؤ المنظوم يقدم أهل الدين ويفضل المساكين لا يطمع القوي في باطله ولا يأيس الضعيف من عدله فأقسم بالله لرأيته في بعض أحواله وقد أرخى الليل سدوله وغارت نجومه وهو قابض على لحيته في محرابه يتململ كما يتململ السليم ويبكي بكاء الوالد الحزين وهو يقول في بكائه يا دنيا يا دنيا إلي تعرضت أم لي تشوقت هيهات هيهات لا حان جنبك قد بتتك ثلاثا لا رجعة لي فيك عيشك حقير وخطرك يسير وعمرك قصير آه من يعد الدار وقلة الزاد ووحشة الطريق قال فانهملت دموع معاوية على خديه حتى كفكفها بكمه واختنق القوم جميعا بالبكاء فقال معاوية رحم الله أبا الحسن فلقد كان كذلك فكيف جزعكم عليه يا ضرار قال جزع من ذبح ولدها في حجرها فما تسكن حرارتها ولا ترقى دمعتها قال فقال معاوية لكن أصحابي لو سئلوا عني بعد موتي ما أخبروا بشئ مثل هذا
ழிறார் இப்னு லம்றா அவர்கள் ஒரு முறை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்ற போது ‘அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சொல்லுங்களேன்’ என முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ழிறார் இப்னு லம்றாவிடம் கேட்டார்கள். அதற்கு ழிறார் இப்னு லம்றா ‘முஃமின்களின் தலைவரே இந்த விடயத்தில் எனக்குக் கொஞ்சம் விட்டுத் தருவீர்களா?’ எனக் கேட்டார். அதற்கு முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘உமக்கு விட்டுத் தரமாட்டேன் நீர் சொல்லத்தான் வேண்டும்’ என்றார்கள். ‘நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் என்றால், நான் சொல்கிறேன்’ என்று தொடர்ந்த ழிறார் இப்னு லம்றா
‘அல்லாஹ் மீது ஆணையாக அவர் ஒரு வீரராகவிருந்தார்.
அவரைச் சூழ அறிவு ஊற்றெடுத்துப்பாயும், அவரின் நாக்கில் ஞானம் பேசும்.
உலக இன்பங்களைத் துறந்தொதுங்கி  இரவின் மடியில் இறைவனை வணங்கி அவர் ஆறுதலடைவார்.
அதிகம் சிந்திப்பார். அதிகமாயழுது கண்ணீர் வடிப்பார்.
தவறு செய்தவரைப் போல தனது கைகளைப் பிசைந்து, புரட்டிக் கொண்டிருப்பார்.
தினமும் தன்னை சுய விசாரனை செய்வார்.
அவர் எங்களில் ஒருவராகவே இருந்தார். அவரிடம் நாம் சென்றால் எம்மை அருகிலெடுத்து அரவனைத்துக் கொள்வார். அவரோடு மிக அந்நியோனியமாக நாமிருந்ததாலும், நம்முடன் இரண்டர அவர் கலந்திருந்ததாலும் அவரை நாம் அழைத்தால் எமக்கு பதிலளிப்பார். அவரின் அந்தஸ்துக்காகவும், அவர் மீதான மரியாதைக்காகவும் அவரோடு பேசமாட்டோம்.
புன்னகைத்தால் அவர் மின்னும் மாணிக்கம் போன்றிருப்பார்.
மார்க்க முடையோரை முற்படுத்துவார்.
ஏழைகளை சிறப்பிப்பார்.ஒரு பலசாலி தனது வேலைகளை பலத்தை வைத்து அவரிடம் நிரைவேற்றிக் கொள்ள எண்ணமாட்டான். ஓரேழை அவரின் நீதியில் நம்பிக்கையிழக்கமாட்டான்.
இரவு தன் இருளையிழுத்துக் கொள்ள, விண்மீன்கள் விழிக்கும் வேளையில் மிஹ்ராபிலிருந்து கொண்டு தனது தாடியைப் பிடித்துக் கொண்டு அவர் அழுத சந்தர்ப்பங்களை நான் கண்டுள்ளேன். கவலை மிகுந்த ஒரு தந்தை அழுவதைப் போன்று அவர் அழுவார். ‘ஓ உலகமே! உன்பால் என்னை வசீகரிக்கப் பார்க்கின்றாயா? அது துரமாகிவிட்டது! உன்பால் மீண்டும் நான் திரும்பமாட்டேன் ஏனென்றால் உனக்கு நான் முத்தலாக் சொல்லி விட்டேன். நான் உன்னில் வாழ்வது கேவலமானது. உனது அச்சுறுத்தல் அற்பமானது உனது ஆயுள் குறுகியது. கட்டுச்சாதனம் குறைந்ததும், ஆபத்துக்கள் நிறைந்ததும், மிக நீளமானதுமான பிரயாணம் இது......’
என்று சொல்லிக் கெண்டிருக்கும் போது, முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விம்மி அழத் துவங்கினார்கள். அவர்களின் கண்ணங்களிரண்டிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடியது. தன் கைகளால் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைத் துடைக்க முனைந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவையோர் அனைவரும் அழுது விம்மத்துவங்கினர். அப்போது முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘ஹஸனின் தந்தை அலியிற்கு அல்லாஹ் அருள்பாளிப்பானாக! ழிறாரே நீங்கள் இப்போது எப்படிப்பட்ட வேதனையை உணர்கிறீர்’ எனக் கேட்டார்கள். அதற்கு ழிறார் அவர்கள் ‘தன் மடியில் வைத்து தன் குழந்தை அறுக்கப்பட்டால் அந்தத் தாய் எவ்வாறு பரிதவித்து, கண்ணீர் சிந்திக் கதறுவாளோ அதைப் போன்றதொரு வேதனயைத்தான் நான் இப்போது உணர்கின்றேன்’ என்றார். அதற்கு முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘எனது மரணத்தின் பின்பு எனது தோழர்களிடம் என்னைப் பற்றிக் கேட்கப்பட்டால் இதைப்போன்று கூறமாட்டார்கள்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முஹம்மத் பின் கஸ்ஸான், ஆதாரம் : தாரீஹு திமிஷ்க்)
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களோடு முஆவியா ரளியல்லாஹு அன்ஹு எந்தவிதமான குரோதமோ, பொறாமையோ கொண்டிருக்கவில்லை என்பதற்கு இச்சம்பவம் மிகப்பெரும் சான்றாக அமைகின்றது.
மரணிக்கும் தருவாயில் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
تاريخ دمشق – (59 216)اللهم إني قد أحببت لقاءك فأحب لقائي
யா அல்லாஹ் உன்னை சந்திக்க நான் விரும்புகின்றேன். எனது சந்திப்பை நீ விரும்புவாயாக. (அறிவிப்பவர் : உபதா பின் நுஸை ஆதாரம் : தாரீஹு திமிஷ்க்)
தான் ஒரு சாம்பிராஜ்யத்தின் தளபதியாகவிருந்தாலும் அதிகாரத்தோடு, ஆணவத்தோடு இருக்காமல் எந்நேரமும் அல்லாஹ்வைப் பயந்தவராகவும், இஸ்லாத்துக்காகவே வாழ்ந்தவர்களாகவும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
தனது மகனுக்கு ஆட்சிப் பொறுப்பை வழங்கியது எதற்காக என்பதை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
تاريخ الخلفاء -
1- 182)اللهم إن كنت إنما عهدت ليزيد لما رأيت من فضله فبلغه ما أملت و أعنه و إن كنت إنما حملني حب الوالد لولده و أنه ليس لما صنعت به أهلا فأقبضه قبل أن يبلغ ذلك ’
யா அல்லாஹ் யஸீதை நான் ஆட்சிப் பொறுப்பிற்கு அமர்த்தியதெல்லாம் அவரிடமுள்ள சிறப்புக்குத்தான் என்றால் அதில் அவருக்கு உதவி செய்வாயாக! அவ்வாறல்லாமல் தந்தை மகன் பாசத்துக்காகத்தான் நான் அவரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியிருந்தேனாயின் அதைப் பெற முன்னர் அவரைக் கைப்பற்றி விடு’ என்று முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அதிய்யா பின் கைஸ், ஆதாரம்: தாரீஹுல் ஹுலபா)
முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் யஸீத் அவர்களைப் படுமோசமானவராக வரலாற்றில் கூறியுள்ளார்கள். இவையனைத்துமே நூறு வீதம் ஷீஆக்களால் புனைந்துரைக்கப்பட்டதாகும்.
இன்ஷா அல்லாஹ் சந்தர்ப்பம் கிடைக்கும் போது அது பற்றியும் விரிவாக எழுதுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot